search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடித்துக் கொலை"

    • முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    செய்யாறு அடுத்த தூசி நத்த கொள்ளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வெம்பாக்கத்தில் காஞ்சிபுரம்- கலவை சாலையில் தனியார் பள்ளி எதிரே குளக்கரையில் செல்வராஜ் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதாக பிரம்மதேசம் போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அப்போது செல்வராஜின் அருகே இரும்பு ராடும் அவரது தலையில் வெட்டு காயங்களும் இருந்தது. வாலிபரை மர்ம நபர் யாரோ இரும்பு ராடால் சரமாரியாக அடித்தும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் முன்விரோத தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
    • சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது தம்பி சாரங்கபாணி. இவ்விரு குடும்பத்தாருக்கு இடையே சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில், விஸ்வநாதன், அவரது மனைவி கஸ்தூரி, மகன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சாரங்கபாணி, அவரது மனைவி ராஜாமணி, மகன்கள் உதயசூரியன், ரஞ்சினிகுமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி (எலக்ட்ரீசியன்) நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரகுபதியின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி, சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உதயசூரியன், ரஞ்சினிகுமார், பரிமளா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாரங்கபாணி உறவினர் வீடுகளில் இரவு நேரங்களில் நெய்வேலி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் நெய்வேலியை விட்டு தப்பிச் செல்லமுடியாதவாறு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • குடிபோதையில் கணவர் வெறிச்செயல்
    • கொலைக்கு பயன்படுத்திய கம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பகராமன் புதூர் குளத்தின் அருகே செங்கல்சூளை உள்ளது .

    மிஷின் காம்பவுண்டு பகுதியைச் சேர்ந்த சசி என்பவர் இந்த செங்கல் சூளையை நடத்தி வருகிறார். இங்கு 4 குடும்பத்தினர் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

    இவர்களில் மேற்கு வங்காளம் மாநிலம் போல் பூர் பகுதியைச் சேர்ந்த வசந்தி (வயது 29) என்பவர் கணவர் டெபுராய் மற்றும் 9 வயது மகனுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று அவர்கள் வேலை செய்து விட்டு வீட்டில் படுத்து தூங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை வசந்தி, தனது வீட்டில் காயங்களோடு பிணமாக கிடந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவர்கள் செங்கல் சூளை உரிமையாளர் சசிக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர் சம்பவ இடம் வந்து பார்த்து விட்டு, ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தியின் உடலில் பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதால், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதணைக்குஅனுப்பி வைத்தனர்.

    சம்பவம் குறித்து டெபுராயிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரது 9 வயது மகனிடம் விசாரித்த போது, இரவில் மது அருந்தி விட்டு வந்த டெபுராய்க்கும், வசந்திக்கும் தகராறு ஏற்பட்டதும், இதில் ஆத்திரம் அடைந்த டெபுராய் கம்பால் வசந்தியை சரமாரியாக தாக்கியதும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து டெபுராயை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு வசந்தி, 3-வது மனைவி என்பதும் வசந்திக்கு, டெபுராய் 2-வது கணவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் 9 வயது மகன், வசந்தியின் முதல் கணவருக்கு பிறந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் டெபுராய், குடும்பத்துடன் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் தான் தற்போது அவர் மனைவியை கொலை செய்துள்ளார். கொலைக்கு பயன்படுத்திய கம்பை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வசந்தியின் உடலில் பல்லால் கடித்த காயங்களும் இருப்பதாக தெரிகிறது. எனவே டெபுராய் குடிபோதையில் மனைவியை கடித்தாரா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுபற்றி பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார்.
    • கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் சின்னப்பன் தெருவை சேர்ந்த இளங்கோ மகன் விஜயகுமார் (வயது 29). இவர் லாரிகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். விஜயகுமாருக்கு ரேகா தேவி(28) மற்றும் வைஷ்ணவி(27) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு 11 வயதில் ஒரு மகனும் 2-வது மனைவிக்கு 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து திருவாக் கவுண்டனூர் பகுதியில் வசித்து வருகிறார். 2-வது மனைவி வைஷ்ணவியுடன் விஜயகுமார் வசித்து வந்தார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக வைஷ்ணவி அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த விஜயகுமார் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்த புகார் பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விஜயகுமார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விஜயகுமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    விஜயகுமாருக்கும் அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 3 வாலிபர்கள் விஜயகுமாரை தாக்கி உள்ளனர் இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.

    விஜயகுமாரை தாக்கிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் இது சம்பந்தமாக சிலரை பிடித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

    ×