search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Zabarsadiq"

    • ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
    • பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    சென்னை:

    டெல்லியில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சூடோபெட்ரின் என்கிற போதைப் பொருளை கடத்திய வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க. அயலக அணி முன்னாள் செயலாளருமான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் பிடியில் சிக்கிய ஜாபர்சாதிக் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் போதை பொருட்களை கடத்தி பணம் சம்பாதித்து இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் ஜாபர்சாதிக் போதை பொருள் கடத்தல் மூலமாக ரூ.40 கோடியை சுருட்டி இருப்பதற்கான ஆதாரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

    இந்த பணத்தில் ரூ.18 கோடியை ஜாபர்சாதிக் சினிமா மற்றும் ஓட்டல் தொழிலில் முதலீடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். டெல்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்பிய ஜாபர்சாதிக் ஒரு கிலோ போதைப் பொருளுக்கு ரூ. ஒரு லட்சம் பணத்தை கமிஷனாக பெற்று வந்திருப்பது ஏற்கனவே தெரிய வந்துள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ஜாபர்சாதிக் ஒரே நேரத்தில் மங்கை, இறைவன் மிகப்பெரியவன் உள்பட 4 படங்களை தயாரித்து வந்துள்ளார். இதனால் ரூ.18 கோடி பணத்தையும் தாண்டி சினிமாவில் மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் கொட்டியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் தயாரித்து வந்த படங்களை இயக்கிய சினிமா இயக்குனர்களுக்கு எத்தனை கோடி பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டது? என்பது பற்றிய விவரங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ளனர். இதில் சினிமா இயக்குனர்களுக்கு சில கோடிகள் வரையில் குறிப்பிட்ட தொகை பேசப்பட்டு அந்த பணத்தை ஜாபர் சாதிக் கொடுத்திருப்பதும் அம்பலமாகியுள்ளது.

    இந்த பணம் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த பணமாகவே கருதப்படுகிறது.

    போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்களில் இயக்குனர் அமீர் மட்டுமே விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    2-வது முறையாக டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அமீரை விசாரணைக்காக அழைத்துள்ளனர். அமீரின் சொத்து விவரங்கள், பண பரிமாற்ற தகவல்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் மேலும் ஒரு இயக்குனரிடமும் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதை தவிர ஜாபர்சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோரிடமும் அமலாக்க துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.

    ஜாபர்சாதிக்கின் வங்கி கணக்கு விவரங்களை அமலாக்க துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் ரூ.21 கோடி பணத்துக்கு உரிய கணக்கு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணமும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணமாகவே இருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்த பணத்தை அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர். ரூ.40 கோடி பணத்தை தவிர மேலும் பல கோடிகளை ஜாபர்சாதிக் சுருட்டியிருப்பதற்கான ஆதாரங்களையும் அமலாக்கதுறை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.

    இதனால் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மேலும் பல பரபரப்பான புதிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • தி.மு.க. அரசு சிலிண்டர் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது.
    • உதயநிதி ஸ்டாலின் ஏன் ஜாபர் சாதிக் உடன் உள்ள போட்டோவை நீக்கி உள்ளார். இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பதில் சொல்ல வேண்டும்.

    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக டெல்லியில் உள்ள கட்சி தலைவர்களை சந்திக்க சென்று இருந்தார். இந்தநிலையில் இன்று காலை அவர் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். இந்த நாள் மட்டும் பெண்களுக்கு சிறந்த நாள் இல்லை. வருடத்தில் அனைத்து நாளும் பெண்களுக்கு சிறந்த நாள் தான். பெண்கள் தான் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    மோடி அரசு பெண்கள் தினத்தை முன்னிட்டு, சிலிண்டருக்கு மேலும் ரூ.100 மானியமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் தி.மு.க. அரசு சிலிண்டர் விலையை குறைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதுவரை 100 ரூபாய் கூட குறைக்கவில்லை.

    ஜாபர்சாதிக் தி.மு.க.வின் அயலக அணியில் இருந்து கொண்டு அதை வைத்து போதை பொருட்களை கடத்தி உள்ளார். இது குறித்து தி.மு.க. வினர்தான் பேச வேண்டும். ஆனால் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலை பேச வைத்து உள்ளனர். ஜாபர் சாதிக் விவகாரத்தில் போலீஸ் டி.ஜி.பி.யை பலிகடாவாக தி.மு.க.மாற்றி உள்ளது. இதே போல் தான் சைலேந்திரபாபுவை வைத்து கோவை குண்டுவெடிப்பில் சிலிண்டர் வெடிப்பு என்று பேச வைத்தனர். உதயநிதி ஸ்டாலின் ஏன் ஜாபர் சாதிக் உடன் உள்ள போட்டோவை நீக்கி உள்ளார். இதற்கெல்லாம் தி.மு.க. வினர் பதில் சொல்ல வேண்டும். மார்ச் 22-ந்தேதிக்கு பிறகும் பிரதமர் மோடி தமிழகத்திற்கு பலமுறை வர உள்ளார். இதைப்பற்றி பின்னர் விவரமாக தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×