search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Xerox shop"

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.
    • வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (வயது 50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார்.

    இன்று காலையில் வழக்கம் போல் வானுமாமலை மற்றும் அவரது மனைவி 9 மணியளவில் கடையை திறந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.

    அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. அசோக் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
    • செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

    கோவை:

    கோவை பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமு(வயது41).

    இவர் தனது வீட்டு அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இங்கு சவுரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஜெராக்ஸ் எடுக்க சென்றார்.

    அப்போது ராமு தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததார்.

    இதனை பார்த்த கல்லூரி மாணவர் ராமுவை கண்டித்து, அவரது செல்போனை வாங்கி பார்த்தார். அப்போது, அவரது செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.

    மேலும் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களும் இருந்தது. இதனை பார்த்ததும் கல்லூரி மாணவரும், அவரது நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே ராமு அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். உடனடியாக கல்லூரி மாணவர் நண்பர்களுடன் சேர்ந்து அவரை மடக்கி பிடித்து தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அங்கு இருந்தவர்கள் ராமுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கல்லூரி மாணவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ராமு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அவர் செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.

    இந்நிலையில், ராமுவும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நான் கடையில் இருந்த போது 2 பேர் கடைக்கு வந்தனர்.

    அவர்கள் எனது செல்போனில் கல்லூரி மாணவிகளின் வீடியோக்கள் இருப்பதாகவும், அதனை சோதனை செய்ய வேண்டும் என கூறி செல்போனை கேட்டனர். கொடுக்க மறுத்ததால் அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி செல்போனை பறித்தனர்.

    அவர்கள் தாக்கியதில் நான் கீழே விழுந்ததில் எனக்கு காயம் ஏற்பட்டது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.

    அதன்பேரிலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×