என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவிகள்-பெண்களை புகைப்படம் எடுத்து ரசித்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர்
- செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
- செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை:
கோவை பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமு(வயது41).
இவர் தனது வீட்டு அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இங்கு சவுரிபாளையம் அண்ணாமலை நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஜெராக்ஸ் எடுக்க சென்றார்.
அப்போது ராமு தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்ததார்.
இதனை பார்த்த கல்லூரி மாணவர் ராமுவை கண்டித்து, அவரது செல்போனை வாங்கி பார்த்தார். அப்போது, அவரது செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது தெரியவந்தது.
மேலும் ஏராளமான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களும் இருந்தது. இதனை பார்த்ததும் கல்லூரி மாணவரும், அவரது நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே ராமு அங்கு இருந்து தப்பி செல்ல முயன்றார். உடனடியாக கல்லூரி மாணவர் நண்பர்களுடன் சேர்ந்து அவரை மடக்கி பிடித்து தாக்கினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கு இருந்தவர்கள் ராமுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கல்லூரி மாணவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ராமு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் அவர் செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காட்டி பெண்களை மிரட்டி வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
இந்நிலையில், ராமுவும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், நான் கடையில் இருந்த போது 2 பேர் கடைக்கு வந்தனர்.
அவர்கள் எனது செல்போனில் கல்லூரி மாணவிகளின் வீடியோக்கள் இருப்பதாகவும், அதனை சோதனை செய்ய வேண்டும் என கூறி செல்போனை கேட்டனர். கொடுக்க மறுத்ததால் அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் பேசி செல்போனை பறித்தனர்.
அவர்கள் தாக்கியதில் நான் கீழே விழுந்ததில் எனக்கு காயம் ஏற்பட்டது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
அதன்பேரிலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்