என் மலர்
நீங்கள் தேடியது "Womens Dead"
- படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்தும் வேனும் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பேருந்தும், கூவத்தூரில் இருந்து வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு வந்த வேனும் நேருக்க நேர் மோதி விபத்த ஏற்பட்டது. இந்த விபத்தில் வேனில் பயணித்த தனியார் நிறுவன பெண் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது.
- கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்றபோது விபரீதம்.
சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளது. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந் ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 பெண்களின் உடல்கள் கரை ஒதுங்கியது.
கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவியை காப்பாற்றச் சென்ற பெண்களும் அலையில் சிக்கி பலியானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவி ஷாலினி, தேவகி செல்வம், பவானி, காயத்திரி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.
- சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர்.
தாயில்பட்டி:
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆடி பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆடி கடைசி வெள்ளியான இன்று இருக்கன்குடி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகிறார்கள். இதில் நேர்த்திக்கடனாக ஏராளமானோர் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, திருத்தங்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர்.
அதேபோல் சிவகாசி அருகே உள்ள நதிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று இரவு தங்கள் ஊரில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
அவர்கள் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் சிவகாசியை அடுத்த சாத்தூர் மெயின் ரோடு தாயில்பட்டி பகுதியில் 3 பேர், 4 பேர் என குழு, குழுவாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த லாரி சாலையோரமாக நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதைப் பார்த்த அவர்களுடன் வந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தனர். இந்த கோர விபத்தில் பழனியம்மாள் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவருடன் சென்ற சண்முகப்பிள்ளை (50) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர்.
சக பக்தர்கள் கொடுத்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு தாயில்பட்டி போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் சண்முகபிள்ளையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் முத்துராஜ் (38) பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக தாயில்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேரிந்த லாரி டிரைவர் லட்சுமணன் (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவர் மது போதையில் இருந்தாரா? அல்லது தூக்க கலக்கத்தில் பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தாரா? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாதயாத்திரை சென்ற இரண்டு பெண்கள் லாரி மோதி பலியானது அவர்களது சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
- கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பண்டிதமேடு பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சம்பவ இடத்திலேயே 5 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் சாலை ஓரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், உடல் நசுங்கி உயிரிழந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரை பிடித்த உயிரிழந்த பெண்களின் உறவினர்கள் சரமாறியாக அடித்தனர்.
கார் ஓட்டி வந்தவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரை பிடித்த போலீசார் விபத்து தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் வர வேண்டும் என வலியுறுத்தி உடல்களை சாலையில் வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் கிராம மக்களுடன் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
- ரவிச்சந்திரனும் சக்தியும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர்.
- திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர், ரெயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி சக்தி(வயது 21). இவர்களது மகள் சேவா. இவருக்கு இன்று முதல் பிறந்தநாள் ஆகும். இதை கொண்டாட சக்தியின் பாட்டி ராஜேஸ்வரி (71) மற்றும் சக்தியின் தாய் கங்கம்மாள், அவரது அக்காள் ஜெயம்மாள் ஆகியோர் பெங்களூரில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தனர்.
பின்னர் அவர்களை ரவிச்சந்திரனும் சக்தியும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் திருவொற்றியூருக்கு அழைத்து வந்தனர். அவர்கள் திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அந்தப் பகுதி இருட்டாக இருந்ததாலும் மேலும் வயதான ராஜேஸ்வரியும் ஜெயம்மாளும் தண்டவாளத்தில் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் சென்ட்ரலில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்தது. இதனை பார்த்த சக்தி தண்டவாளத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரியையும் ஜெயம்மாளையம் காப்பாற்றுவதற்காக ஓடிவந்தார்.
அப்போது அவர்கள் 3 பேர் மீதும் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் சக்தி, மற்றும் அவரது பாட்டி ராஜேஸ்வரி ஆகிய 2பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
ஜெயம்மாள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






