என் மலர்

    நீங்கள் தேடியது "wedding nostalgia"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாகூரில் திருமண ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    பாகூர் தாமரைக்குளம் வீதியை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் மாரியப்பன் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருக்கு 2 தங்கைகள் உள்ளனர். இதில் மூத்த தங்கைக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த மாரியப்பன் தனது பெற்றோரிடம் முதலில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தகராறு செய்தார். அதற்கு பெற்றோர் மூத்த தங்கைக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு பிறகு திருமணம் செய்து வைப்பதாக மாரியப்பனை சமாதானப்படுத்தினர்.

    ஆனால், இதனை ஏற்று கொள்ளாத மாரியப்பன் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் எலி மருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார்.

    மறுநாள் காலையில் மாரியப்பன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்ததை கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை மாரியப்பன் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சங்கரன்கோவில் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை அடுத்த கே.வி.நல்லூர் அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது27). கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 2 ஆண்டாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் பெண் கிடைக்கவில்லையாம். இதனால் முருகன் விரக்தி அடைந்தார்.

    இந்த நிலையில் நேற்று அங்குள்ள பம்புசெட் பகுதிக்கு சென்ற அவர் அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுபற்றி கே.வி.நல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முருகன் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேனி அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் சுக்காங்கல்பட்டியைச் சேர்ந்தவர் சுதாகரன் (வயது 42). இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் எதுவும் அமைய வில்லை. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சுதாகரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஏற்கனவே திருமண ஏக்கத்தில் இருந்த சுதாகரனுக்கு உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டது.

    இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சுதாகரன் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதகடிப்பட்டில் திருமண ஏக்கத்தில் ஓட்டல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருபுவனை:

    வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனி (வயது 28). இவர் கடந்த 3 ஆண்டுகளாக மதகடிப்பட்டில் முருகன் என்பவர் நடத்தி வரும் ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த சில மாதங்களாக தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும்படி ஓட்டல் உரிமையாளரிடமும், ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடமும் வலியுறுத்தி வந்தார். ஆனால், யாரும் பழனிக்கு திருமணம் செய்து வைக்க முன்வரவில்லை. இதனால் பழனி குடிபழக்கத்துக்கு ஆளானார்.

    நேற்று மாலை பழனி மது குடித்து விட்டு ஓட்டலுக்கு வந்தார். அப்போது ஓட்டல் உரிமையாளர் முருகனிடம் திருமணம் செய்து வைக்கும்படி மீண்டும் வலியுறுத்தினார்.

    அதற்கு ஓட்டல் உரிமையாளர் முருகனுக்கு திருமணம் செய்து வைக்க மறுத்ததோடு இனிமேல் ஓட்டல் வேலைக்கு வரவேண்டாம் என்று கோபமாக கூறினார்.

    இதனால் விரக்தியுடன் ஓட்டல் மாடிக்கு சென்ற பழனி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்குபோட்டு தொங்கினார். வெகு நேரமாக சாப்பிட வராததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் உரிமையாளர் முருகன் மற்றும் சக ஊழியர்கள் ஓட்டல் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பழனி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லாஸ்பேட்டையில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கடலூர் வெள்ளப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 31). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாஸ்பேட்டை சண்முகா நகரில் உள்ள தனது அக்காள் அறிவழகி வீட்டில் தங்கி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அரிதாஸ் தனது அக்காள் அறிவழகியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். ஆனால், பல இடங்களில் பெண் பார்த்தும் அரிதாசுக்கு ஏற்ற பெண் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அரிதாஸ் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மன முடைந்த அரிதாஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு அச்சகத்தில் இருந்து வீடு திரும்பிய அரிதாஸ் வீட்டின் அறையை பூட்டி கொண்டு ஆஸ்பெட்டாஸ் கூரையில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

    சந்தேகம் அடைந்த அரிதாசின் அக்காள் கணவர் ஆடலரசு கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அரிதாஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×