என் மலர்

    நீங்கள் தேடியது "vomit"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர்.
    • அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். அவரது மகன் ஆண்டனி சாங் கோசன் (வயது 14). அதே பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று ஆண்டனி சாங் கோசன் தாய் பொற்செல்வி,சகோதரி அனுசியா உடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சென்றார். நேற்று கோவிலில் இருந்து சென்னைக்கு பஸ்சில் வந்தனர். அப்போது பஸ் மதுரை அருகே வந்தபோது ஒரு தனியார்ஓட்டலில் பஸ்சை நிறுத்தினர். அந்த ஹோட்டலில் ஆண்டனி ஜான் கோசன் குளிர்பானம் குடித்துள்ளான். குளிர்பானம் குடித்த பின்னர் 4 முறை வாந்தி எடுத்துள்ளான்.

    அவரது தாய் பொற்செல்வி பார்த்து பஸ்சில் சென்று வருவதால் இப்படி இருக்கும் என்று நினைத்து பின்னர் மயக்க நிலையில் இருந்த ஆண்டனி ஜான் கோசனை தூங்க வைத்துள்ளனர். பின்னர் பஸ் திண்டிவனம் வந்தது. பொற்செல்வி பஸ்சில் மகன் ஆண்டனிஸ் ஜான் கோசனை எழுப்பினார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொற்செல்வி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆண்டனி ஜான் கோசனை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆண்டனி ஜான் கோசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திண்டி வனம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் எந்த காரணத்தினால் இறந்தான் என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராயக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி ராயக்கோட்டையை அடுத்த கொப்பகரை அருகே உள்ள பால்னம்பட்டி கெங்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி சீதா (40). இவர்களுக்கு ரஞ்சிதா (23) என்ற மகளும், ரமேஷ் (21) என்ற மகனும் உள்ளனர்.

    வெங்கட்ராமன் அவருக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டின் அருகே ஒரு குடிசை வீட்டை கட்டி அதில் சமையல் செய்து வந்தனர். நேற்று சீதா அந்த குடிசை வீட்டில் புளிசாதம் சமைத்தார். பின்னர் அந்த சாதத்தை இரவு 4 பேரும் சாப்பிட்டனர். 

    சிறிது 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சீதா புளிசாதம் செய்தபோது பல்லி விழுந்ததாகவும், அதனை அவர்கள் சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. 
    ×