search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valasaravakkam"

    • கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது
    • ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது.

    நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக 50 ரூபாய் மதிப்புள்ள தரமான, சுவையான 'பிரிஞ்சி' (வெஜிடபிள் பிரியாணி) ரூபாய் 10க்கு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை வளசரவாக்கத்தில் உள்ள கார்த்தி மக்கள் மன்ற தலைமை அலுவலக வாசலில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது

    ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை இங்கே உணவு வழங்கப்படுகிறது

    ஊருக்கே உணவு சப்ளை செய்யும் டெலிவரி பாய்கள், கொரியர் மேன்கள், உதவி இயக்குனர்கள், உடல் உழைப்பு தொழிலாளர்கள் போன்ற பலருக்கு இந்த உணவகம் தினமும் பசியாற்றி வருகிறது.

    லாப நோக்கம் எதுவும் இன்றி ஒரு மக்கள் சேவையாக இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று 17.04.2024) இந்த உணவகம் தொடங்கி தனது 500-வது நாளை நிறைவு செய்தது.

    வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் லட்சுமி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அனந்தபத்மநாபன் (வயது58). சாப்ட்வேர் என்ஜினீயர்.

    இவர் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் 16-ந் தேதி மாலை சென்னை திரும்பினார்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    தியாகராய நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணண் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தேடி வந்த நிலையில் மதுரவாயல் அருகே நேற்று இரவு இலங்கையைச் சேர்ந்த சிவராஜன் (43), அவனது கூட்டாளி தருண் (31) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 87 பவுன் தங்க நகைகள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சிவராஜன் கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து மதுரை ஆனையூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி அங்கு பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் சக்கரபாணி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி மீன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் மதுரவாயல், வளசரவாக்கம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    சிவராஜன் மீது ஏற்கனவே மதுரை கூடல்நகர் பகுதியில் 6 கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடலோர காவல்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    வளசரவாக்கத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடியத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    வளசரவாக்கம், ராஜாஜி அவின்யூவைச் சேர்ந்தவர் ரங்கராஜன். நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நங்க நல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் வங்கி பாஸ்புக் கொண்ட பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இந்த நிலையில் இன்று காலை விருகம்பாக்கம் போலீசார் ரெட்டி தெருவில் உள்ள சாலையில் கிடந்த ரங்கராஜனின் வங்கி பாஸ்புக்கை கைப்பற்றினர். கொள்ளையர்கள் ரங்கராஜன் வீட்டில் நகைகளை எடுத்து கொண்டு பாஸ் புக்கை சாலையில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரில் பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர் ஸ்ரீலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர். விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி இரவு சுந்தர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் சுந்தர் வீட்டின் மீது 2 மண்எண்ணை குண்டுகளை வீசி தப்பி சென்றுவிட்டனர்.

    வீட்டின் முன்பகுதி மற்றும் ஜன்னல் மீது விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சுந்தர், குடும்பத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமி‌ஷனர் ஞானசுந்தர், இன்ஸ்பெக்டர் அழகு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மண்எண்ணை குண்டுகளை வீசியது விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தை சேர்ந்த தக்காளி பிரபா மற்றும் கூட்டாளிகள் என்பது தெரிந்தது.

    இதையடுத்து மேட்டுக்குப்பத்தை சேர்ந்த வெள்ளை மணி என்கிற வினோத், கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    முக்கிய குற்றவாளியான தக்காளி பிரபா, கூட்டாளிகள் சரவணன், புறா முத்து, பார்த்திபன் ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த அன்று காலை பெட்ரோல் பங்க்கில் உள்ள அலுவலகத்தில் தக்காளி பிரபா கோஷ்டியினர் செல்போன் திருடி உள்ளனர்.

    இது தொடர்பாக சுந்தர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த கோபத்தில் அவரது வீட்டில் மண்எண்ணை குண்டுகளை தக்காளி பிரபா கோஷ்டியினர் வீசி இருப்பது தெரிந்தது. #Tamilnews
    ×