search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆழ்வார்திருநகரில் பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசிய 2 பேர் கைது
    X

    ஆழ்வார்திருநகரில் பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசிய 2 பேர் கைது

    வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகரில் பெட்ரோல் பங்க் அதிபர் வீட்டில் மண்எண்ணை குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகர் ஸ்ரீலட்சுமி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுந்தர். விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந் தேதி இரவு சுந்தர், குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் சுந்தர் வீட்டின் மீது 2 மண்எண்ணை குண்டுகளை வீசி தப்பி சென்றுவிட்டனர்.

    வீட்டின் முன்பகுதி மற்றும் ஜன்னல் மீது விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சுந்தர், குடும்பத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமி‌ஷனர் ஞானசுந்தர், இன்ஸ்பெக்டர் அழகு ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மண்எண்ணை குண்டுகளை வீசியது விருகம்பாக்கம், மேட்டுக்குப்பத்தை சேர்ந்த தக்காளி பிரபா மற்றும் கூட்டாளிகள் என்பது தெரிந்தது.

    இதையடுத்து மேட்டுக்குப்பத்தை சேர்ந்த வெள்ளை மணி என்கிற வினோத், கார்த்தி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    முக்கிய குற்றவாளியான தக்காளி பிரபா, கூட்டாளிகள் சரவணன், புறா முத்து, பார்த்திபன் ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    சம்பவம் நடந்த அன்று காலை பெட்ரோல் பங்க்கில் உள்ள அலுவலகத்தில் தக்காளி பிரபா கோஷ்டியினர் செல்போன் திருடி உள்ளனர்.

    இது தொடர்பாக சுந்தர் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இந்த கோபத்தில் அவரது வீட்டில் மண்எண்ணை குண்டுகளை தக்காளி பிரபா கோஷ்டியினர் வீசி இருப்பது தெரிந்தது. #Tamilnews
    Next Story
    ×