search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tribe"

    • பல்துறை சார்ந்த உதவிகள் பெற்று வழங்கிட "பழங்குடி இன மக்களுக்கான" சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
    • திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (18.04.2023) காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளதால் திண்டிவனம் கோட்டத்தில்நடைபெறுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோட்ட அளவில் உள்ள பழங்குடி யின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவார ணங்கள், நலத்திட்டங்கள் மற்றும் சான்றுகள் வழங்கு தல் மற்றும் அவர்களுக்கு தேவையான பல்துறை சார்ந்த உதவிகள் பெற்று வழங்கிட "பழங்குடி இன மக்களுக்கான" சிறப்பு குறைதீர்வு கூட்டம் திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமையில் திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (18.04.2023) காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளதால் திண்டிவனம் கோட்டத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா கேட்டுக் கொண்டுள்ளார்.

    அமேசான் காட்டில் தனது இனத்தினர் அனைவரும் கொல்லப்பட்ட நிலையில் காட்டுவாசி ஒருவர் தன்னந்தனியாக ஒருவர் 22 ஆண்டுகளாக வசித்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. #AmazonJungle
    பிரேசிலியா:

    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளில் இப்போதும் பல்லாயிரக்கணக்கான காட்டுவாசி மக்கள் வசித்து வருகிறார்கள்.

    வெளியாட்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் நிர்வாணமாக அவர்கள் அடர்ந்த காடுகளில் சுற்றி திரிகிறார்கள்.

    அமேசான் காடுகளை அழித்து விவசாய பண்ணைகளாக மாற்றுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அவ்வாறு பண்ணைகளை உருவாக்குபவர்கள் அந்த காடுகளில் வசிக்கும் காட்டு வாசிகளை கொன்று விடுகிறார்கள்.

    இவ்வாறு அங்குள்ள ரொண்டோனியா பகுதியில் 1996-ம் ஆண்டு விவசாய பண்ணை உருவாக்கப்பட்ட போது அந்த இடத்தில் 7 பேர் கொண்ட காட்டுவாசிகள் வசித்து வந்தனர். அவர்களில் 6 பேரை விவசாய பண்ணை அமைத்தவர்கள் கொன்று விட்டனர்.

    அதில் ஒருவர் மட்டும் தப்பினார். அங்கு சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த காடுகள் உள்ளது. அந்த காட்டுக்குள் அவர் 22 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

    காட்டுவாசி வசிக்கும் குடிசை வீடு.

    வெளியாட்களை கண்டால் காட்டுக்குள் உள்ளே ஓடி ஒளிந்து கொள்கிறார். அவர் புல்- புதர்களை கொண்டு சிறு குடிசை அமைத்துள்ளார். அங்கு தான் வசித்து வருகிறார்.

    அவர் வசிக்கும் பகுதிக்கு யாரும் சென்று தொந்தரவு கொடுக்க கூடாது என்று பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. அவரது செயல்பாட்டை பிரேசில் நாட்டில் புனாய் குழுமம் என்ற அமைப்பு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

    சமீபத்தில் அவர் கோடாரி கொண்டு ஒரு மரத்தை வெட்டும் காட்சியை தூரத்தில் இருந்து வீடியோ மூலம் பதிவு செய்து இருக்கிறார்கள். அதை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.  #AmazonJungle

    ×