search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Town panchayat Meeting"

    • சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி கூட்டம் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை தலைவர் பிரியா மேரி, கவுன்சிலர்கள் கண்ணன், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், ராமமூர்த்தி, முத்துராஜா, முருகேஸ்வரி, ப்ளாட்டினா மேரி, இந்திரா, ஜெப தங்கம், சுமதி, பிரவீனா, அமுதா, முத்துமாரி, சுகாதார மேற்பார்வையாளர் நித்ய கல்யாண் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்தில் சாத்தான்குளம் பஸ் நிலையம் புதியதாக அமைக்க ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதையடுத்து பஸ் நிலையம் மற்றும் வணிக வளாக கடைகள் புதியதாக அமைக்கப்பட உள்ளது.
    • சாத்தான்குளம் பேரூராட்சிக்கு சிறப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிறப்பூரில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூ ராட்சி சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாரியம்மாள், செயல் அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவியாளர் ஆறுமுகம் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் சாத்தான்குளம் பஸ் நிலையம் புதியதாக அமைக்க ரூ.5.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளதை அடுத்து பஸ் நிலையம் மற்றும் வணிக வளாக கடைகள் புதியதாக அமைக்கப்பட உள்ளது. பஸ் நிலையத்தில் புதிய கடைகள் கட்டியதும் பேரூராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வர்களை தவிர தற்போது கடை நடத்தி வரும் அனை வருக்கும் வணிக கடைகள் வழங்குவது, சாத்தான்குளம் பேரூ ராட்சிக்கு சிறப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிறப்பூரில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அதில் போர்க்கால அடிப்படையில் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து கூடுதலாக தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுப்பது, புதியதாக குடிநீர் இணைப்பு கேட்டு விண்ண ப்பித்த 1,500 பேருக்கு 3 மாதத்திற்குள் குடிநீர் இணைப்பு வழங்குவது, தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில் கொண்டு பேரூராட்சி 15 வார்டுகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் தொட்டி அமைப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பி னராக தேர்வு பெற்றுள்ள முன்னாள் பேரூராட்சித் தலைவரும், 4-வது வார்டு உறுப்பினரு மான ஜோசப்பிற்கு வாழ்த்து தெரி விக்கப்ப ட்டது. கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் சுந்தர், ஞானஜோதி கிறிஸ்து மஸ், ஜோசப் அலெக்ஸ், ஜோசப், ஜான்சிராணி, ஸ்டேன்லி, லிசா, இந்திரா, மகாராஜன், தேவனேசம், மகேஸ்வரி, கற்பகவள்ளி, லிங்கபாண்டி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.

    • சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பைப் லைன் பதித்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பைப் லைன் பதித்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக 15-வது வார்டு கவுன்சிலர் ரமேஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
    • வீட்டு மனைகளுக்கு அப்ரூவல் வழங்க கோரிக்கை வைத்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மன்றத்தில் உள்ள அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    பேரூராட்சி மன்றத்தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் சிவகிரி பகுதியில் உள்ள ஓடைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


    அதற்கு உடனடியாக செயல் அலுவலர் ஒப்புதல் அளித்தார். சிவகிரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் சிவகிரி பகுதியில் அப்ரூவல் இல்லாத வீட்டு மனைகளுக்கு அப்ரூவல் வழங்க கோரிக்கை வைத்தனர். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் உறுதியளித்தார்.

    வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதாக தகவல் வருகிறது. ஆய்வு செய்யும் போது குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் எனவும் தலைவர், துணைத் தலைவர், செயல் தலைவர் ஆகியோர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வீடுகளில் உள்ள முறை இல்லாத குடிநீர் இணைப்புகளுக்கு பேரூராட்சியில் முறையான அனுமதி வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு சிவகிரி பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கூட்டம் பேரூராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கூட்டம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வார்டு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பறைகளை முறையாக பராமரிப்பு செய்தல், பெரியகுளம் நகராட்சியுடன் தாமரைக்குளம் பேரூராட்சியை இணைக்க நகராட்சி சார்பில் தபால் வந்துள்ளது என தீர்மானத்தில் ஏற்றினர்.

    இதனை ஏற்று கொள்ள முடியாது என மறுப்பு செய்து ஒருமனதாக நிராகரித்தனர். சாலைகள் சேதம் அடைந்துள்ள பகுதிகளில் புதிதாக சாலை வசதிகள் அமைத்தல் உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பேரூராட்சி துணைத்தலைவர் மலர்க்கொடி சேதுராமன், பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன், செயல்அலுவலர் ஆளவந்தான், வார்டு கவுன்சிலர்கள் மைதிலி, ஜாஹீர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×