சிவகிரியில் பேரூராட்சி கூட்டம்

சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பைப் லைன் பதித்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் நடந்த போது எடுத்த படம்
கூட்டம் நடந்த போது எடுத்த படம்
Published on

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அனைத்து வார்டுகளிலும் பைப் லைன் பதித்தல், சுகாதார வளாகம் பராமரிப்பு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக 15-வது வார்டு கவுன்சிலர் ரமேஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com