search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tenkasi kasi viswanathar temple"

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் மாசி மக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாசி மக பெருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நடைபெற்றது. 9.45 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க, மேள, தாளங்கள் ஒலிக்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விழாவில் முதலில் சுவாமி தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து 10.45 மணிக்கு நிலையத்தை அடைந் தது. பின்னர் 11 மணிக்கு அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இந்த தேர் நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்து 12 மணிக்கு நிலையத்தை அடைந் தது. தேருக்கு முன்னால் சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களுடன் பக்தி கோஷங்கள் எழுப்பினர்.
    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசியில் காசி விசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, ராமாயணம் குறித்த தோல்பாவை கூத்து கதை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியவை நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசியில் பிரசித்தி பெற்ற காசிவிசுவநாத சுவாமி சமேத உலகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், வீதிஉலா ஆகியவை நடைபெற்றது. மாலையில் சமய சொற்பொழிவு நடந்தது.

    திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 8.30 மணிக்கு உலகம்மன் தேருக்கு எழுந்தருளினார். காலை 9.15 மணிக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரானது 4 ரத வீதிகளிலும் மேள தாளம் முழங்க வலம் வந்து 9.50 மணிக்கு நிலையத்தை அடைந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர்.

    விழாவில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ், மேலகரம் செயலாளர் கார்த்திக் குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.20 மணிக்கு யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 6.05 மணிக்கு தெற்கு மாசிவீதியில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி வைபவம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

    ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர். 
    தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் ரூ.3 கோடியில் திருப்பணி கும்பாபிஷேகம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.#TNAssembly #KasiViswanatharTemple
    சென்னை:

    சட்டசபையில் இன்று தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது:-

    வடக்கே வடகாசி என்றால் தெற்கே தென்காசி என்பார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரில் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில் காணப்பட்டது.

    அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் முன்வந்து கோவில் கோபுர திருப்பணிகளை தொடங்கி வைத்தார். 25.11.1984 அன்று தனது முதல் பணியை தொடங்கி, முதல் தளத்தை அய்யா சிவந்தி ஆதித்தனார் முடித்து கொடுத்தார்கள்.

    அதைத்தொடர்ந்து அந்த கோபுர பணிகள் 6 ஆண்டுகள் செய்யப்பட்டு முடிந்தது. அப்போது கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

    2004-ம் ஆண்டு அம்மா ஆட்சியின்போது காசி விசுவநாதர் கோவிலுக்கு மீண்டும் திருப்பணிகள் ஆரம்பித்து கும்பாபிஷேகம் நடந்தபோது அரசு சார்பில் ரூ.10 லட்சம் அந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது.

    அப்போது திருப்பணிகள் தொடங்கும் சமயத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் கோவிலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார். இதனால் 17.3.2006 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

    தற்போது 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் காசிவிசுவநாதர் ஆலயத்துக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கோவில் திருப்பணிக்கு பக்தர்கள் நன்கொடைகள் வழங்க தயாராக உள்ளனர்.

    எனவே கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறியதாவது:-

    தென்காசி காசி விசுவநாதர் கோவில் 17.3.2006 அன்று குடமுழக்கு நடந்தது. ஆகம விதிப்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.

    குடமுழக்கு நடைபெற அம்மாவின் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பணிக்கான மதிப்பீடு ரூ.3 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNAssembly #KasiViswanatharTemple
    ×