என் மலர்
நீங்கள் தேடியது "தென்காசி காசி விசுவநாதன் கோவில்"
- கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி முதல் தொடங்குகிறது.
- 7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக பூஜைகள் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
அன்று காலை 5 மணிக்கு ராஜ அனுக்ஜை, (பராக்கிரம பாண்டிய மன்னர் வழிபடுதல்), விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், பாத்ர பூஜை, தன பூஜை, விப்ரனுக்ஞை, கிராம தேவதானுக்ஞை, ஸ்ரீமகா கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

காலை 8.30 மணிக்கு பிரம்மச்சாரி பூஜை, கஜபூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தீர்த்தம் எடுத்து வருதல், ஹோமம் ஆகியவை நடக்கிறது.
4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சாந்தி ஹோமம், திசா ஹோமம், ஸம்ஹிதா ஹோமம், மூர்த்தி ஹோமம், பிரசன்னாபிஷேகம், யாகசாலை ஸ்தண்டிலம் அமைத்தல், காலை 10.15 மணிக்கு விநாயகர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
மாலை 5 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து 7-ந் தேதி வரை 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெறுகிறது.
7-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் உலகம்மன் உடனுறை காசி விசுவநாத சுவாமி கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக நாட்களில் சதுர்வேத பாராயணம், திருமுறை பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷகேத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர வேத சிவாகம பாடசாலை முதல்வர் செல்வம்பட்டர், ஆலய தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி மேற்பார்வையில் உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன், கோவில் செயல் அலுவலர் பொன்னி, ஆய்வாளர் சரவணக்குமார், அறங்காவலர்கள் முருகேசன், புவிதா, சஷீலா குமார், மூக்கன் மற்றும் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
சட்டசபையில் இன்று தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுந்து ஒரு கேள்வி எழுப்பினார். அவர் கூறியதாவது:-
வடக்கே வடகாசி என்றால் தெற்கே தென்காசி என்பார்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஊரில் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்த நிலையில் காணப்பட்டது.
அப்போது எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் முன்வந்து கோவில் கோபுர திருப்பணிகளை தொடங்கி வைத்தார். 25.11.1984 அன்று தனது முதல் பணியை தொடங்கி, முதல் தளத்தை அய்யா சிவந்தி ஆதித்தனார் முடித்து கொடுத்தார்கள்.
அதைத்தொடர்ந்து அந்த கோபுர பணிகள் 6 ஆண்டுகள் செய்யப்பட்டு முடிந்தது. அப்போது கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
2004-ம் ஆண்டு அம்மா ஆட்சியின்போது காசி விசுவநாதர் கோவிலுக்கு மீண்டும் திருப்பணிகள் ஆரம்பித்து கும்பாபிஷேகம் நடந்தபோது அரசு சார்பில் ரூ.10 லட்சம் அந்த கோவிலுக்கு வழங்கப்பட்டது.
அப்போது திருப்பணிகள் தொடங்கும் சமயத்தில் அய்யா சிவந்தி ஆதித்தனார் கோவிலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்தார். இதனால் 17.3.2006 அன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
தற்போது 12 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் காசிவிசுவநாதர் ஆலயத்துக்கு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். கோவில் திருப்பணிக்கு பக்தர்கள் நன்கொடைகள் வழங்க தயாராக உள்ளனர்.
எனவே கோவிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசு ஆவன செய்யுமா?
இவ்வாறு அவர் பேசினார்.
அதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பதில் அளித்து கூறியதாவது:-
தென்காசி காசி விசுவநாதர் கோவில் 17.3.2006 அன்று குடமுழக்கு நடந்தது. ஆகம விதிப்படி இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
குடமுழக்கு நடைபெற அம்மாவின் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருப்பணிக்கான மதிப்பீடு ரூ.3 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார். #TNAssembly #KasiViswanatharTemple






