search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மக திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் மாசி மக திருவிழா நாளை தொடங்குகிறது

    தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் மாசி மக திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் தென்காசியில் காசி விசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை 10 மணிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 6 மணிக்கு சமய சொற்பொழிவு, ராமாயணம் குறித்த தோல்பாவை கூத்து கதை நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு மண்டகப்படி தீபாராதனை, சுவாமி- அம்பாள் வீதி உலா ஆகியவை நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன், கோவில் ஆய்வாளர் கணேஷ் வைத்திலிங்கம் ஆகியோர் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×