என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teacher Dead"

    இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சமுத்து (74). அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து உதவி தலைமை ஆசிரியராக உயர்வு பெற்ற இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்றார்.

    சிறந்த இறகு பந்து மற்றும் பூப்பந்து விளையாட்டு வீரர். மிதிவண்டி ஓட்டுவதில் விருப்பம் கொண்டவர்.

    வித்தியாசமான சிந்தனை கொண்ட இவர் இவரது சொந்த கிராமமான முத்தம்பட்டியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் பளிங்கு கற்களில் இவரது படத்துடன் கூடிய கல்லறையை தனக்கு தானே அமைத்துக் கொண்டார்.

    அந்த கல்லறையில் முத்தம்பட்டி ஆறுமுகம் வாரியார், மனைவி மாரியம்மாளின் மகன் காசி, குருசாமி பிச்சமுத்து, உதவி தலைமை ஆசிரியர் பிறப்பு 1.7.1952, இறப்பு .... 20.. என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் இவர் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இவரது விருப்பப்படி, இவர் தனக்குத்தானே கட்டிக் கொண்ட கல்லறையில், இன்று இவரது உடலை அடக்கம் செய்ய இவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.

    ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானே கல்லறை அமைத்துக் கொண்டு உயிரிழந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வாழப்பாடி பகுதியில் இவரது இறப்பு பேசு பொருளாகியுள்ளது.

    • ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • ஷகிலா நிறைமதியை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஷகீலா நிறைமதி (59). இவர் திருவள்ளூர் அடுத்த ராம தண்டலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கணவரிடம் விவாகரத்து பெற்று மகன் நவீனுடன் (29) தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஷகீலா நிறைமதி, தனது மகன் நவீனுடன் மோட்டார் சைக்கிளில் மணவாளநகர் வெங்கத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெங்கத்தூர் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் வேகத்தடையின் மீது ஏறி இறங்கியது. அப்போது பின்னால் அமர்ந்து இருந்த ஷகிலா நிறைமதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ஷகிலா நிறைமதிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷகிலா நிறைமதி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சென்ற போது ஆனந்தி திடீரென காருக்குள் மயங்கி விழுந்தார்.
    • அதிர்ச்சி அடைந்த கணவர் துரைராஜன் மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் திருக்காட்டுப்பள்ளி டி.இ.எல்.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் துரை ராஜன். இவரது மனைவி ஆனந்தி (வயது 59) இவர் திருக்காட்டுப்பள்ளி செய்யமங்கலம் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதிகள் இருந்தன. இதற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இதற்கிடையே ஆனந்தி தனது கணவருடன் திருச்சி கே.கே. நகரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்தனர். பின்னர் கணவன்- மனைவி இருவரும் கார் மூலம் திருக்காட்டுப்பள்ளிக்கு புறப்பட்டனர்.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் சென்ற போது ஆனந்தி திடீரென காருக்குள் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த கணவர் துரைராஜன் மனைவியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஆனந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக துரைராஜன் கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் தீபக் (வயது 27). இவர் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டாக தீபக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்தபோதிலும் வயிற்று வலி தீரவில்லை.

    அதைத் தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த தீபக் ஏற்கனவே இருமுறை தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது பெற்றோர்கள் அவரைக் காப்பாற்றினர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அருகாமையில் வசிக்கும் தனது மாமனார் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு அறையில் தீபக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக அவரது தந்தை செல்வேந்திரன் உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.
    • தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.

    தாம்பரம்:

    தாம்பத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 50). இவர் படப்பையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக தனது மகள் தீபிகா (வயது 21) உடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

    மதனபுரம் அருகில் ஏற்கனவே எரிவாயு குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பகுதியை கடக்க முயற்சி செய்த போது வேகத்தை கட்டுப்படுத்த பிரேக் பிடித்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் பின் டயர் ஏறி இறங்கிதில் படுகாயம் அடை ந்தார். தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி உயிரிழந்தார்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×