என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 138536"

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் மையம் அமைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
    தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ‘வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்கப்படுகிறது. மானியத்தில் அமைக்கும் இந்த புதிய திட்டத்தை கடந்த 2021-22ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகின்ற னர். 

    விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டு களை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடு களுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்ப டுத்தும் நோக்கத்துடனும் இம்மையங்கள் அமைக்கப்ப டுகின்றன. 

    தொழில் முனைவோர், விவசாயகுழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். 

    2022-23-ம் ஆண்டு வேளாண் கூட்டத் தொடர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 25 மையங்கள் அமைக்கப்ட உள்ளன. இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும். 

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகாமையிலுள்ள வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை (பொறுப்பு) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம். 

    மாவட்ட கலெக்டர் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மையங்கள் அமைக்கத் தேவையான எந்திரங்கள் ஒப்பந்தப்பு ள்ளி அடிப்படையில் கண்காணிப்புப் பொறியா ளரால் முடிவு செய்யப்பட்டு, பயனாளிகள் மொத்த தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
     
    கரூர் மாவட்டத்தில் பழைய காலனி வீடுகளை பழுது பார்க்க ரூ.10½ கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். #MRVijayabaskar
    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை மற்றும் கடவூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவு ஆணை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். பாராளுமன்ற துணை சாபநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயாபாஸ்கர் கலந்து கொண்டு பழைய காலனி வீடுகளை பழுது நீக்கி கொள்ளுவதற்கான நிதியுதவி மற்றும் வேலை உத்தரவுகளை வழங்கினர்.

    அப்போது இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவிக்கையில்,

    கரூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட காலனி வீடுகளை பழுது நீக்கித் தர அதிகளவில் கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. பழைய வீடுகளை பழுது நீக்க சட்டமன்ற மேம்பாட்டு நிதியை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாடு முதல்–அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறப்பு நிதி பெற்று ஒரு வீட்டிற்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது.

    கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 350 வீடுகளும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 150 வீடுகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 130 வீடுகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 300 வீடுகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 250 வீடுகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 314 வீடுகளும் என மொத்தம் 2094 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு அதற்காக ரூ.10 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேலை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி குளித்தலை, கிருஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 994 வீடுகளுக்கு ரூ.4 கோடியே 97 லட்சம் மதிப்பிலான வேலை உத்தரவுகள் வழங்கப்படுள்ளது. மீதமுள்ள பகுதிகளுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, மனோகரன், தவமணி, ராஜேந்திரன், வட்டாட்சியர்கள் சுரேஷ்குமார், கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.#MRVijayabaskar
    வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் பழுதாகி நின்ற குடிநீர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதான லாரி அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck
    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் லாரி ஒன்று, இன்று காலை வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தது.

    காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள கணேசபுரம் ரெயில்வே பாலத்தில் குடிநீர் லாரி சென்றபோது பழுதாகி நின்றது. உடனே பழுதை சரிசெய்ய முடியவில்லை.

    12 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் பாலத்தில் நின்ற அந்த லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் ரெயில்வே பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

    இதுபற்றி குடிநீர் வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மற்றொரு குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மாற்றப்பட்டது.

    மீதம் உள்ள 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாலத்தில் திறந்து விடப்பட்டது. அது வெள்ளம்போல் ரோட்டில் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வேறு ஒரு வாகனம் மூலம் பழுதான லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    குடிநீர் லாரி ரெயில்வே பாலத்தில் நின்று போனதால் வியாசர்பாடி பகுதியில் மதியம் 12 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழுதான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck

    ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம் புகளூர், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து குழாய்கள் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தவுட்டுப்பாளையம் -பாலத்துறை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே செல்லும் குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தி வரும் நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏர்வால்வில் ஏற்பட்ட பழுதினை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் கிராமத்தில் இடிந்துவிழும் நிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடிக்க வலியுறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் யூனியன் புத்தேந்தல் கிராமத்தில் சுமார் 650-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஊரின் கடைசியில் உள்ள வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குழாய்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது.

    கடந்த பல ஆண்டுகளாக இந்த தண்ணீரை தான் புத்தேந்தல் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஊரில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பின்றி போனதால் பெரும்பாலான குழாய்களில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலைத்தொட்டியின் அருகில் புதிதாக 4 குழாய்கள் அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த தண்ணீர் சிறிது சிறிதாக வருவதால் இரவு பகலாக மக்கள் காத்திருந்து காவிரி தண்ணீரை பிடித்து செல்கின்றனர். ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் குடிநீர்தொட்டி நாளடைவில் அதன் உறுதித்தன்மையை இழந்து சிமெண்டு பூச்சுக்கள் பெயர்ந்து விழத்தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து வந்த நிலையில் தற்போது மேல்நிலை குடிநீர்தொட்டி எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

    இந்த நிலை காரணமாக மேல்நிலைத்தொட்டியில் அரைமணி நேரம் மட்டுமே தண்ணீர் ஏற்றப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த குடிநீர் தொட்டியின் அருகில் தான் பெண்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுதவிர இங்கு பஸ் நிறுத்தம் உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பஸ் மற்றும் இதர வாகனங்களுக்காக காத்திருப்பார்கள்.

    இதுபோன்ற நிலையில் ஆபத்தான மேல்நிலைத்தொட்டி இடிந்து விழுந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளதால் உடனடியாக தொட்டியை இடிக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மழைகாலத்திற்கு முன்பாக மோசமானநிலையில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக இடித்து விட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    ×