என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் பழுதாகி நின்ற குடிநீர் லாரி
Byமாலை மலர்29 Nov 2018 9:23 AM GMT (Updated: 29 Nov 2018 9:23 AM GMT)
வியாசர்பாடி ரெயில்வே பாலத்தில் பழுதாகி நின்ற குடிநீர் லாரியால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதான லாரி அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck
பெரம்பூர்:
சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் லாரி ஒன்று, இன்று காலை வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தது.
காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள கணேசபுரம் ரெயில்வே பாலத்தில் குடிநீர் லாரி சென்றபோது பழுதாகி நின்றது. உடனே பழுதை சரிசெய்ய முடியவில்லை.
12 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் பாலத்தில் நின்ற அந்த லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் ரெயில்வே பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.
இதுபற்றி குடிநீர் வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மற்றொரு குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மாற்றப்பட்டது.
மீதம் உள்ள 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாலத்தில் திறந்து விடப்பட்டது. அது வெள்ளம்போல் ரோட்டில் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வேறு ஒரு வாகனம் மூலம் பழுதான லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
குடிநீர் லாரி ரெயில்வே பாலத்தில் நின்று போனதால் வியாசர்பாடி பகுதியில் மதியம் 12 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழுதான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck
சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் லாரி ஒன்று, இன்று காலை வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு சென்று கொண்டிருந்தது.
காலை 10 மணியளவில் அம்பேத்கர் கல்லூரி சாலையில் உள்ள கணேசபுரம் ரெயில்வே பாலத்தில் குடிநீர் லாரி சென்றபோது பழுதாகி நின்றது. உடனே பழுதை சரிசெய்ய முடியவில்லை.
12 ஆயிரம் லிட்டர் குடிநீருடன் பாலத்தில் நின்ற அந்த லாரியை அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் ரெயில்வே பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.
இதுபற்றி குடிநீர் வாரியத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மற்றொரு குடிநீர் லாரி வரவழைக்கப்பட்டு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மாற்றப்பட்டது.
மீதம் உள்ள 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாலத்தில் திறந்து விடப்பட்டது. அது வெள்ளம்போல் ரோட்டில் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வேறு ஒரு வாகனம் மூலம் பழுதான லாரியை அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
குடிநீர் லாரி ரெயில்வே பாலத்தில் நின்று போனதால் வியாசர்பாடி பகுதியில் மதியம் 12 மணி வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பழுதான லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு போக்குவரத்து சீரானது. #WaterTruck
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X