search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Syed Kirmani"

    தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி முடிவுகளை எதிர்த்து சவால் கொடுக்க தேர்வுக்குழுவிற்கு போதுமான அனுபவம் இல்லை என கிர்மானி தெரிவித்துள்ளார். #BCCI
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 1-4 என இழந்தது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டியில் விளையாடிய முரளி விஜய் 4-வது மற்றும் கடைசி போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். கருண் நாயர் ஐந்து போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை.

    தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. அணியில் சேர்க்காதது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் எங்களிடம் ஏதும் தெரிவிக்கவில்லை. நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறவில்லை என்று தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

    ஆனால் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இருவரின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இந்நிலையில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி ஆகியோரின் முடிவை எதிர்க்க தேர்வுக்குழுவிற்கு போதிய அனுபவம் இல்லை என்று முன்னாள் இந்திய அணி விக்கெட் கீப்பரும், தேர்வுக்குழு தலைவரும் ஆன சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சையத் கிர்மானி கூறுகையில் ‘‘நீங்கள் என்னிடம் கேட்டால், தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, முக்கிய தேர்வாளராக இருக்கிறார் என்பேன். ரவி சாஸ்திரி, விராட் கோலி மற்றும் சீனியர் உறுப்பினர்கள், எதை விரும்புகிறார்களோ, அதை தேர்வுக்குழுவில் வலியுறுத்துகிறார்கள்.

    மரியாதை கொடுக்கக்கூடிய தேர்வுக்குழு ரவி சாஸ்திரி, கோலியை விட அனுபவமற்றவர்களாக இருக்கிறார்கள். ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் அவர்களை விட அதிக அனுபவம் பெற்றவர்களாக இருப்பதால், நிர்வாகம் என்ன விரும்புகிறதோ, அதை செய்கிறார்கள். ஏனென்றல் அவர்களால் எதிர்த்து விவாதம் செய்ய முடியாது’’ என்றார்.
    இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2018 சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்டலர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

    இந்நிலையில் இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் விக்கெட் கீப்பராக சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சையத் கிர்மானி கூறுகையில் ‘‘இளம் விக்கெட் கீப்பர்கள் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இருந்து வந்தவர்கள். சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் போன்றோர்களின் ஆட்டநிலை மிகவும் சிறப்பாகிக் கொண்டு வருகிறது. இருவரும் தங்களுடைய பணிகளை சரியாக செய்துக் கொண்டிருக்கின்றனர்.



    ஆனால், இன்னும் ஏராளமான வகையில் முன்னேற்றம் காண வேண்டும். இந்த முன்னேற்றம் அனுபவத்தால் மட்டுமே கிட்டும். மாறுபட்ட சூழ்நிலையில், ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சார்களுக்கு எதிராக இன்னும் அதிகமான அனுபவத்தை பெற வேண்டும்.

    ஒரு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதாது. உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடினார். இதேபோல் டெஸ்ட், நான்கு நாள் ஆட்டம் மற்றும் 50 ஓவர் போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கவில்லை’’ என்றார்.
    ×