search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது- கிர்மானி
    X

    ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது- கிர்மானி

    இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2018 சீசனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் லோகேஷ் ராகுல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜோஸ் பட்டலர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

    இந்நிலையில் இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் விக்கெட் கீப்பராக சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சையத் கிர்மானி கூறுகையில் ‘‘இளம் விக்கெட் கீப்பர்கள் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இருந்து வந்தவர்கள். சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த் போன்றோர்களின் ஆட்டநிலை மிகவும் சிறப்பாகிக் கொண்டு வருகிறது. இருவரும் தங்களுடைய பணிகளை சரியாக செய்துக் கொண்டிருக்கின்றனர்.



    ஆனால், இன்னும் ஏராளமான வகையில் முன்னேற்றம் காண வேண்டும். இந்த முன்னேற்றம் அனுபவத்தால் மட்டுமே கிட்டும். மாறுபட்ட சூழ்நிலையில், ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சார்களுக்கு எதிராக இன்னும் அதிகமான அனுபவத்தை பெற வேண்டும்.

    ஒரு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதாது. உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான விளையாட வேண்டும். ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடினார். இதேபோல் டெஸ்ட், நான்கு நாள் ஆட்டம் மற்றும் 50 ஓவர் போட்டியில் விளையாடுவார் என்று நினைக்கவில்லை’’ என்றார்.
    Next Story
    ×