என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sub-registrar Office"
- பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
- சார்பதிவாளர்கள் காலதாமதமாக அலுவலகத்திற்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு பதிவுத்துறை விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.அதன் பிறகு மாவட்ட பதிவுத்துறையால் நாள் தோறும் தற்காலிக சார் பதிவாளர்களை பாவூர்சத்திரம் சார்பதி வாளர் அலுவலகத்திற்கு பணிக்கு அனுப்பி வருகிறது.
ஆனால் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் சார்பதிவாளர்கள் அனைவருமே காலையில் மிகவும் காலதாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் முதியோர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் கர்ப்பிணிபெண்கள் , சிறு வணிகர்கள்,வியாபார பெருமக்கள்,அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோர்கள் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.இதனால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.
மேலும் பழைய பிறப்பு, இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற மனு அளித்து இரண்டு மாதம் ஆனாலும் தற்காலிக சார்பதிவாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
எனவே பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து அப்பகுதி பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்று மாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 5 சென்ட் கொண்ட நிலத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேர் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றனர்.
- போலீசார் 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்
நெல்லை:
பாளை பரணர் தெருவை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் சாமுவேல். இவருக்கு சொந்தமான இடம் வி.எம். சத்திரம் இந்திரா நகரில் உள்ளது.
மொத்தம் 5 சென்ட் கொண்ட இந்த நிலத்தை இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேர் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றனர்.
இதனை அறிந்த சார் பதிவாளர் சண்முகசுந்தரம் பாளை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற குமரி மாவட்டம் காவு விளையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் என 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்