search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake Registration"

    • 5 சென்ட் கொண்ட நிலத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேர் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றனர்.
    • போலீசார் 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்

    நெல்லை:

    பாளை பரணர் தெருவை சேர்ந்தவர் மூக்கையா. இவரது மகன் சாமுவேல். இவருக்கு சொந்தமான இடம் வி.எம். சத்திரம் இந்திரா நகரில் உள்ளது.

    மொத்தம் 5 சென்ட் கொண்ட இந்த நிலத்தை இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேர் போலியாக பத்திரப்பதிவு செய்ய முயன்றனர்.

    இதனை அறிந்த சார் பதிவாளர் சண்முகசுந்தரம் பாளை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற குமரி மாவட்டம் காவு விளையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் மற்றும் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் என 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

    ×