search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students rescue"

    • மாணவர்கள் வீட்டிற்கு வராததால் அவர்களது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர்.
    • இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல்பாளையம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் விவாஷ் (12). அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பரத்பாண்டி (12), ஜங்கால்பட்டியை சேர்ந்த ராஜா மகன் சக்திவேல் (10). இதில் விவாஷ் மற்றும் பரத்பாண்டி ஆகிய 2 பேரும் மைக்கேல்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    சக்திவேல் அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் 3 பேரும் தினந்தோறும் பள்ளிக்கு ஒன்றாக சென்று மாலையில் ஒன்றாக திரும்புவது வழக்கம். அதன்படி நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாலை வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இரவு 11 மணிவரை மாணவர்கள் வீட்டிற்கு வராததால் இதுகுறித்து அவர்களது பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் தலைமையிலான போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடி வந்தனர். மேட்டுப்பட்டி, நிலக்கோட்டை, கொடைரோடு சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களிலும் தேடினர். தற்போது பழனிக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வதால் அவர்களுடன் சென்று விட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி தேடினர்.

    இந்நிலையில் இரவில் மேட்டுப்பட்டி சமுதாயக்கூடத்தில் தூங்கிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை மீட்டு விசாரித்தனர். கடந்த மாதம் சின்னாளபட்டியில் 2 பள்ளி மாணவர்களை பைக்கில் வந்த வாலிபர் கடத்தி செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் அவரை துரத்திப்பிடிக்க முயன்றனர். இதனால் மாணவர்களை கொடைரோடு டோல்கேட் முன்பு இறக்கிவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். அதே போல் இந்த மாணவர்களையும் யாரேனும் கடத்திச் செல்ல முயன்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தொண்டியில் மாயமான 3 பள்ளி மாணவிகள் திருச்சியில் மீட்கப்பட்டனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி வேலம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் ஆர்த்தி (வயது 15). அதே தெருவில் வசிப்பவர்கள் குமார் மகள் அஸ்வினி (15), முருகானந்தம் மகள் கனிகா (14).

    இவர்கள் 3 பேரும் தொண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று மாலையில் வீட்டில் இருந்த ஆர்த்தி, அஸ்வினி, கனிகா ஆகியோர் திடீரென மாயமானார்கள்.

    இதனால் பதற்றம் அடைந்த அவரது பெற்றோர்கள் மகள்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இதுகுறித்து ஆர்த்தியின் தாய் சித்ரா, தொண்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவிகளை தேடி வந்தார்.

    இதனிடையே 3 பேரும் நேற்று இரவு திருச்சியில் உள்ள ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரையும் ரெயில்வே போலீசார் விசாரித்தபோது, வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது.

    இதையடுத்து மாணவிகளை மீட்ட போலீசார் தொண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவிகளை அழைத்து வர திருச்சிக்கு சென்றனர்.

    ×