என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Student enrollment"
- தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டத்தில், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடலூர், கடலூர் (மகளிர்), சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், மங்களுர் மற்றும் நெய்வேலி தொழிற்பயிற்சி நிலை யங்களில் 2023-ம் ஆண்டு பயிற்சியாளர்களுக்கு காலியாக உள்ள தொழிற் பிரிவு இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர் இந்ந வாய்ப்பினை பயன்படுத்தி அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர்ந்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைங்களில் உள்ள தொழிற் பிரிவு விபரங்கள் அறிய இணையதளத்தினை பார்த்து கொள்ளலாம். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நேரடியாக சேர்க்கை அளிக்கப்படும். தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோரும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் ஆகியவை வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு (மின்சாரப்பணியாளர் மற்றும் பொருத்துனர் பிரிவு) சுய வேலை வாய்ப்பு செய்திடும் பொருட்டு கைகருவிகள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. மாறிவரும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு நிறுவனத்துடன் இணைந்து உயர்ரக தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் நவீன தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. நவீன தொழில்நுட்ப பிரிவுகளில் சில இடங்கள் மட்டும் காலியாக உள்ளன. பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவ னங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங் உதவித் தொகை யுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். நேரடி சேர்க்கையில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.
- பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023 -ம் ஆண்டு பயிற்சியில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பு , 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகிற 7-ந் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்விற்கான தரவரிசைப்பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும், பயிற்சியின் போது பிரபல தொழிற் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் ட்ரெய்னிங் உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியா ளர்களுக்கு பிரபல தொழிற் நிறுவன ங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும். இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.50-ஐ விண்ணப்பதாரர் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- சுமார் 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நம் பள்ளி நம் பெருமை மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை மற்றும் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை உள்ளிட்ட அரசு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அரசு பள்ளி ஆரிசியர்கள் பேரணியாக சென்றனர்.
மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முடிவடைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் குரலிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனலோசினி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாட்டு துறையின்கீழ் சிவகங்கையில் மாவட்ட அரசு இசைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு குரலிசை(வாய்ப்பாட்டு), பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. 12 முதல் 30 வயது வரையுள்ள மாணவர்கள் இதில் சேர்ந்துகொள்ளலாம்.
இதில் சேர விரும்பும் நபர்கள் குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பரதநாட்டிய பிரிவில் ஆண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தவில், நாதசுரம் ஆகிய வகுப்புகளில் சேர கல்வித்தகுதி தேவை இல்லை.
அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.152 மட்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு இலவச பஸ் பயண அட்டை, கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.400 மற்றும் அரசு மாணவர் விடுதி வசதி அளிக்கப்படும். எனவே இசை கல்வியில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நேரிடையாக விண்ணப்பித்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்