search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "storm affected"

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருகிறார். #GajaCyclone #TamilisaiSoundararajan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருவது மக்களை கவர்ந்துள்ளது.

    பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி, தனது சொந்த செலவிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை சேகரித்தார். ஒரு நடமாடும் ஆம்புலன்சையும் தயார் செய்து 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.

    3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளார். உட்புற கிராமங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார்.



    பேராவூரணி, புதுக்கோட்டையை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளித்தார். போகும் வழிகளில் இறங்கி சேதங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியும், அவர்களுக்கு உடனடி தேவை என்ன என்பதையும் கேட்டு குறித்து கொள்கிறார். மறுநாள் அதில் முடிந்தவற்றை செய்து கொடுக்கிறார். மருத்துவ குழுவினருடன் பா.ஜனதா தொண்டர்களும் செல்கிறார்கள்.

    நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 37 கிராமங்களுக்கு இந்த குழுவினர் சென்று சிகிச்சை அளித்தனர்.

    பகல் முழுவதும் புயல் பாதித்த பகுதிகளிலேயே சுற்றிவரும் இந்த குழுவினர் கிராமங்களில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

    இரவு வரை நிவாரண உதவிகள் வழங்கும் அவர்கள் அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலேயே தங்குகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள மக்கள் இரவை தாண்டியும் யாராவது வரமாட்டார்களா ஆறுதலாக இருக்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். அவர்களுக்கு இப்போது மனரீதியான ஆறுதலும் தேவை. அவர்களுடன் அமர்ந்தாலே வலியை மறந்து ஆறுதல் அடைகிறார்கள்.

    முகாம்களில் உள்ளவர்களுக்கு உடல்வலி, சளி, இருமல், காய்ச்சல் உள்ளது. அதற்கு தேவையான மருந்துகளை வழங்கி வருகிறோம்.

    மேலும் சத்து மருந்துகள், புரோட்டீன், நாப்கின், டெட்டால் போன்றவற்றையும் வழங்குகிறோம். தொடர்ந்து நிவாரண பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த மனிதாபிமான உதவிகளைகூட கொச்சைப்படுத்தி சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. களத்தில் மக்களோடு மக்களாக இருக்கிறேன். அவர்களின் ஆதரவும், செய்யும் நிவாரண பணிகளும் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #TamilisaiSoundararajan

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லவில்லை என்று பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். #premalatha #gajacyclone #gajaaffected

    மன்னார்குடி:

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று மன்னார்குடிக்கு வந்தார். கோட்டூரில் புயலால் சேதமான வீடுகள், தென்னை மரங்களை பார்வையிட்டார்.

    கஜா புயலால் டெல்டா பகுதியில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. தென்னை, வாழை, மா, பலா போன்றவை பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை. மின்சாரம், குடிநீர், உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

    அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் யாரும் கிராமத்தினரை நேரடியாக சென்று சந்திக்கவில்லை.

    இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அங்கு புயல் பாதிப்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். பிற பகுதிகளுக்கு தேர்தல் சமயத்தில் ஒன்று கூடும் ஆளும் கட்சியினர், அமைச்சர்கள் தற்போது வராதது ஏன்?.

    திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் தனது பயணத்தை மாற்றி அமைத்து உள்ளார். தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்ட பகுதியில் வெள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான பயணத்தை ரத்து செய்துள்ளது. இவர்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது .நகர் முழுவதும் மின் வினியோகம் முழுமையாக சரி செய்யப்படாத நிலையில் பள்ளிக்கூடங்களை அவசர அவசரமாக திறந்து பணிகள் முடிவடைந்ததை முடிவடைந்ததாக கூறுவது கண்துடைப்பு நாடகம்.

    இவ்வாறு அவர் கூறினார். #premalatha #gajacyclone #gajaaffected

    ×