search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "premalath"

    ஈரோட்டில் இன்று மாலை வேட்பாளர்களை ஆதரித்து வைகோ மற்றும் பிரேமலதா போட்டி பிரசாரம் செய்கிறார்கள். #vaiko #premalatha

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு தற்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஈரோடு பகுதிகளில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை 5 மணி முதல் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    அவர் மாலை 5 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசாரத்தை தொடங்கி சூளை, கனிராவுத்தர் குளம், வில்லரசம்பட்டி, நசியனூர் அக்ரகாரம் பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பிரசாரம் செய்து பேசுகிறார்.

    இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

    அவர் கோபி, கவுந்தப்பாடி, ஆர்.என்.புதூர் ஈரோடு கிருஷ்ணம் பாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். #vaiko #premalatha

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லவில்லை என்று பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். #premalatha #gajacyclone #gajaaffected

    மன்னார்குடி:

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா இன்று மன்னார்குடிக்கு வந்தார். கோட்டூரில் புயலால் சேதமான வீடுகள், தென்னை மரங்களை பார்வையிட்டார்.

    கஜா புயலால் டெல்டா பகுதியில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. தென்னை, வாழை, மா, பலா போன்றவை பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை. மின்சாரம், குடிநீர், உணவு, உடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

    அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் யாரும் கிராமத்தினரை நேரடியாக சென்று சந்திக்கவில்லை.

    இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அங்கு புயல் பாதிப்பு நிவாரண பணிகளை அமைச்சர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். பிற பகுதிகளுக்கு தேர்தல் சமயத்தில் ஒன்று கூடும் ஆளும் கட்சியினர், அமைச்சர்கள் தற்போது வராதது ஏன்?.

    திருவாரூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். முதல்-அமைச்சர் தனது பயணத்தை மாற்றி அமைத்து உள்ளார். தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்ட பகுதியில் வெள்ள பாதிப்புகளை கண்டறிவதற்கான பயணத்தை ரத்து செய்துள்ளது. இவர்கள் மீது பொதுமக்கள் கொண்டுள்ள எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது .நகர் முழுவதும் மின் வினியோகம் முழுமையாக சரி செய்யப்படாத நிலையில் பள்ளிக்கூடங்களை அவசர அவசரமாக திறந்து பணிகள் முடிவடைந்ததை முடிவடைந்ததாக கூறுவது கண்துடைப்பு நாடகம்.

    இவ்வாறு அவர் கூறினார். #premalatha #gajacyclone #gajaaffected

    ×