என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » election propaganda
நீங்கள் தேடியது "election propaganda"
ஆலங்குளம் பகுதியில் நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆலங்குளம்:
நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் ஞானதிரவியம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் ஒன்றியத்திலுள்ள வெண்ணிலிங்கபுரத்தில் நேற்று முன்தினம் மாலையில் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதையும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வெண்ணிலிங்கபுரம், காவலாகுறிச்சி, ரெட்டியார்பட்டி, கடங்கநேரி,நெட்டூர், மருதபுரம்,சுப்பையாபுரம், அய்யனார்குளம், சிவலார்குளம்,கரும்புளியூத்து, மாறாந்தை ஆகிய இடங்களில் ஞானதிரவியம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில்,‘ பீடி தொழிலாளர்கள், விவசாயிகள் தேவைகளை அறிந்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவும், அவர்களின் நலன் காக்கவும் பாடுபடுவேன். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையம் நிறைவேற்ற பாடுபடுவேன். இந்த பகுதி ஆலயத்திற்கு எனது சொந்த பணத்தில் கெபி அமைத்து கொடுப்பேன்’ என்றார். இந்த பிரசாரத்தின் போது, மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், ஊத்துமலை ஊராட்சி செயலாளர் கோட்டைச்சாமி, மாவட்ட வக்கீல்கள் அணி துணை அமைப்பாளர் தவசிராஜன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை உட்பட கிளைச்செயலாளர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலையில் 2-வது நாளாக வேட்பாளர் ஞானதிரவியம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட நல்லூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து குருவன்கோட்டை, கீழபட்டமுடையார்புரம், குறிப்பான்குளம், கிடாரகுளம், நாரணாபுரம், மாயமான்குறிச்சி, தெற்கு மாயமான் குறிச்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இரவு ஆலங்குளம் காமராஜர் சிலை அருகில் நேற்றைய பிரசாரத்தை அவர் நிறைவு செய்தார்.
ஈரோட்டில் இன்று மாலை வேட்பாளர்களை ஆதரித்து வைகோ மற்றும் பிரேமலதா போட்டி பிரசாரம் செய்கிறார்கள். #vaiko #premalatha
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு தற்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு பகுதிகளில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை 5 மணி முதல் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
அவர் மாலை 5 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசாரத்தை தொடங்கி சூளை, கனிராவுத்தர் குளம், வில்லரசம்பட்டி, நசியனூர் அக்ரகாரம் பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பிரசாரம் செய்து பேசுகிறார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.
அவர் கோபி, கவுந்தப்பாடி, ஆர்.என்.புதூர் ஈரோடு கிருஷ்ணம் பாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். #vaiko #premalatha
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X