என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan refugee arrested"

    • இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நிஷாலினி ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி (வயது 36). இவர் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதில் அவர் கடந்த 1998-ம் ஆண்டு இலங்கை கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு குடி பெயர்ந்துள்ளார்.

    அங்கு 2019-ம் ஆண்டு மேற்கண்ட திருமயம் முகவரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் நிஷாலினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரது இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எம்பலூர் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52), துபாய் செல்ல இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சேர்ந்த அப்துல் ரபீக்(49) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி
    • 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர்

    கடலூர்:

    கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த வர் ராம மூர்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் தனது பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி காத்திருந்தது.பேக்கரியின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப் பட்டு அங்கிருந்த 20 ஆயிரம் பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி சப்- இன்ஸ்பெக்டர் வேல் குமார் தலைமையில் அதே பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது, முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்த தால் அவரிடம் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டனர். அவர் குறிஞ்சிப்பாடி இலங்கை அகதி முகாமில் தங்கி உள்ள இலங்கை அகதி ரிஷி என்கிற ரதுஷன் (வயது 23) என்பது தெரிய வந்தது. மேலும் பேக்கரி கடையில் பணம் மற்றும் லேப்டாப் திருடியதும் தெரிய வந்தது. போலீசார் ரிஷியை கைது செய்தனர். இந்த கொள்ளையில் மற்றொரு நபரும் ஈடுபட்டு இருப்பதால் அந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    செய்யாறில் மாணவியை கற்பழித்த இலங்கை அகதி போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    செய்யாறு:

    செய்யாறு அருகே தவசி கிராமத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்த 17 வயது மாணவி, இந்தாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார். தேர்வில் தேர்ச்சி பெறாத அந்த மாணவி, மறு தேர்வுக்கு விண்ணப்பித்து தயாரானார்.

    செய்யாறு சத்திய மூர்த்தி தெருவில் கணவருடன் வசிக்கும் அக்காள் வீட்டில் தங்கி டியூசன் சென்று படித்தார். அக்காள் வீட்டில் மாணவி நேற்று தனியாக இருந்தார்.

    இதை அறிந்த அகதிகள் முகாமை சேர்ந்த பெயிண்டர் தொழிலாளி பீட்டர் மகன் உதயன் (36). வீட்டுக்குள் புகுந்தார். மாணவி மட்டும் தனியாக இருந்ததால் வீட்டின் கதவை அடைத்து வலுகட்டாயமாக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. என்னை மாட்டி விட்டால் கொலை செய்து விடுவேன் என்று மாணவியை மிரட்டி விட்டு உதயன் தப்பிச் சென்றார்.

    வீடு திரும்பிய தனது அக்காளிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி மாணவி கதறி அழுதார். இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

    போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குபதிந்து இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் உதயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×