என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற அகதி அதிரடி கைது
    X

    போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற அகதி அதிரடி கைது

    • இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நிஷாலினி ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி (வயது 36). இவர் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அவரது ஆவணங்களை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    இதில் அவர் கடந்த 1998-ம் ஆண்டு இலங்கை கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் பகுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு குடி பெயர்ந்துள்ளார்.

    அங்கு 2019-ம் ஆண்டு மேற்கண்ட திருமயம் முகவரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதுகுறித்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் நிஷாலினியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரது இலங்கை உண்மையான முகவரி பெயர் போன்றவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை எம்பலூர் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52), துபாய் செல்ல இருந்த ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சேர்ந்த அப்துல் ரபீக்(49) ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×