search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special committees"

    • தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
    • சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு இந்த தடவை மிகப்பெரிய அளவில் பணப்பட்டுவாடா நடக்கும் என்று தெரிகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    வாக்காளர்களுக்கு நேரடி யாக பணம் கொடுப் பதை தவிர ஜிபே, போன்பே மூலமாகவும் பணம் கொடுக் கப்படலாம் என்று கருதப் படுகிறது. இதையடுத்து டிஜிட்டல் பணப்பரிவர்த்த னைகளை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    குறிப்பாக டிஜிட்டல் மூலம் மிகப்பெரிய அளவில் பணப்பரிமாற்றம் நடந்தால் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் தனித்தனி குழுக்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.

    டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை கண்காணிக்க சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது. அதுபோல மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்கு ஜிஎஸ்டி துறை சார்பில் தனித்தனி குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    • துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 8-ந் தேதி நடத்தப்பட்டது.
    • கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை நடைமுறைப்படுத்த பெரும்பாலான பள்ளிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    கோவை,

    கோவை மாநகர போக்குவரத்து காவல் பிரிவின் சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ள சுற்றறிக்கை வருமாறு:-

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்கியுள்ளதை அடுத்து பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்காக, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து பள்ளி நிர்வாகத்தினர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 8-ந் தேதி நடத்தப்பட்டது.

    அந்த கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு வாயில்கள் இருக்க வேண்டும். குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்கள் ஒரு வாயில் வழியாக உள்ளே சென்று, பள்ளி வளாகத்திற்குள் மட்டுமே குழந்தைகளை இறக்கிவிட்டு, மற்றொரு வாயில் வழியாக வெளியே வர வேண்டும் எனவும், பள்ளியின் நுழைவாயில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு செய்து பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும், இந்த நடைமுறைகள் செயல்படுத்துவதை கண்காணிக்க தினமும் பொறுப்பான நபர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில், பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற பெரும்பாலான வாகனங்கள், பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படாமல், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் இறங்கி பள்ளிக்குள் செல்வதை காணமுடிந்தது.

    மேலும், ஒலி பெருக்கிகள் நுழைவாயிலின் அருகில் நிறுவப்படவில்லை. பள்ளிக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவ தற்கென பள்ளிகளின் சார்பில் யாரையும் நியமிக்கவில்லை. கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    எனவே, பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கென தினந்தோறும் தனிக்குழுக்க ளை அமைத்து கண்காணிக்க வேண்டும். பள்ளியில் இரண்டு வாயில்களை பயன்படுத்தி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும், பள்ளிக்கு வரும் வாகனங்களால் பொது போக்குவரத்திற்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் செயல்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், இந்த அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    ×