search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "south thirupati"

    • திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
    • கோவிந்தா கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே ஜடையம்பா–ளையத்தில் தென்திருப்பதி ஸ்ரீ வாரி மலையப்பர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வைபவம் மற்றும் சூரிய ஜெயந்தி விழா நடைப்பெற்றது.

    ரதசப்தமியையொட்டி நடந்த இந்த நிகழ்ச்சியில் காலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சூரிய பிரபை புறப்பாடு நடத்தபட்டு சூரியனுக்கு விசேஷ ஆர்த்தி நடைபெற்றது. தொடர்ந்து மலையப்ப சாமி சேஷ வாகனம், அன்னபட்சி வாகனம், அனுமந்த வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    முன் மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு வாகன–ங்களிலும் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் பேரிட்சை, அவல், பழங்கள் போன்றவற்றை தீபத்துடன் தட்டில் எடுத்து சாமிக்கு காணிக்கையாக அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷங்களை எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அன்னூர் கே.கோவிந்தசாமி நாயுடு, கே.ஜி டெனீ்ம் மற்றும் ஸ்ரீ கண்ணபிரான் மில்ஸ் குடும்பத்தார் செய்திருந்தனர்.

    • தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.
    • பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை 6.15 மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை 5. 30 மணிக்கு கொடி ஏற்றமும், இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து புதன்கிழமை சின்ன சேஷ வாகனம், ஸ்நபன திருமஞ்சனம், அன்னபக்‌ஷி வாகனம், 29-ந் தேதி சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், 30-ந் தேதி கற்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம்,

    அக்டோபர் 1-ந் தேதி ஸ்ரீ வாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சமர்ப்பித்து, மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட சேவை நடக்கும்.

    தொடர்ந்து 2-ந் தேதி அனுமந்த வாகனமும், வஸந்தோற்சவம், தங்க ரதம், கஜ வாகனம், 4-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.  

    ×