search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம்
    X

    தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம்

    • தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.
    • பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர நவராத்திரி பிரமோற்சவ விழா கொடி ஏற்றம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை 6.15 மணிக்கு அங்குரார்ப்பணம் நிகழ்ச்சியும், செவ்வாய்க்கிழமை மாலை 5. 30 மணிக்கு கொடி ஏற்றமும், இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து புதன்கிழமை சின்ன சேஷ வாகனம், ஸ்நபன திருமஞ்சனம், அன்னபக்‌ஷி வாகனம், 29-ந் தேதி சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனம், 30-ந் தேதி கற்ப விருட்ச வாகனம், சர்வ பூபாள வாகனம்,

    அக்டோபர் 1-ந் தேதி ஸ்ரீ வாரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மாலை சமர்ப்பித்து, மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் கருட சேவை நடக்கும்.

    தொடர்ந்து 2-ந் தேதி அனுமந்த வாகனமும், வஸந்தோற்சவம், தங்க ரதம், கஜ வாகனம், 4-ந் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×