என் மலர்
நீங்கள் தேடியது "ராமசாமி படையாட்சியார்"
- இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
- பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் இளம்வயதில் இருந்தே போராடிய பெருமைக்குரிய பெரியவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 108-ஆம் பிறந்தநாளான இன்று அவரை வணங்கி மகிழ்கிறேன்.
பாட்டாளி மக்களின் சமூகநீதிக்காக அவர் மேற்கொண்ட முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்கவை. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பணிகளைப் போற்றும் இந்த நாளில், நமது சமூகநீதிக்கான போராட்டங்களை இன்னும் தீவிரமாக வெற்றிக் கொடி நாட்ட உறுதியேற்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமசாமி படையாட்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விடுதலை போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் 108-வது பிறந்த தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னை கிண்டியில் உள்ள எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- ராமசாமி படையாட்சியர் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாட்சியார் திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.
- அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை.
சென்னை:
சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மதுவிலக்கு மாநாட்டிற்கு முதலமைச்சருக்கு நேரில் அழைக்க வந்துள்ளேன்.
மதுவிலக்கு கொள்கை வரையறுக்க கட்சிகளை ஒருங்கிணைப்பது, படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதுதான் மாநாட்டின் நோக்கம்.
மதுஒழிப்பு மாநாட்டின் முதன்மையான நோக்கம் 2.
1. அரசு மதுபான கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.
2. தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும். திமுகவுக்கும் அந்த வேண்டுகோளை வைக்கிறோம்.
அரசியலுக்காக மாநாடு நடத்தவில்லை. இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.
பாமகவோடு சேர்ந்து செயல்பட முடியாதபடி அவர்கள் தான் எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று கூறினார்.






