என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேவி தங்கபாலு"

    • அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
    • சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை மீட்பதற்காக முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஒப்புதலுடன் இந்த குழுவின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.

    கே.வீ.தங்கபாலு-தலைவர், எம்.கிருஷ்ண சாமி-இணைத் தலைவர், கே.எஸ்.அழகிரி-இணைத் தலைவர், எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., டாக்டர் ஏ.செல்லக்குமார், பி.மாணிக்கம் தாகூர் எம்.பி., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராமசுப்பு, கே.ராணி, வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, பெ.விஸ்வநாதன், எம்.கிறிஸ்டோபர் திலக், கோபி நாத் பழனியப்பன், வி.கே.அறிவழகன், ரூபி.ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., ஜே.எம்.எச்.அசன் மவுலானா எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., சி.டி.மெய்யப்பன், டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன், ஆர்.எம்.பழனிசாமி, எஸ்.சுஜாதா, கே.விஜயன், பென்னட் அந்தோணிராஜ், வழக்கறிஞர் ஏ.பி.சூரியப் பிரகாசம், வழக்கறிஞர் ஓ.எம்.ஆர்.பழனிவேல், பி.பாட்ரிக் ராஜ்குமார், தாம்பரம் எஸ்.நாராயணன், வி.எஸ்.கமலிகா காமராஜர், லெனின் பிரசாத், தலைமையக ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் சொர்ணா சேதுராமன், வழக்கறிஞர் டி.செல்வம், வழக்கறிஞர் என்.அருள் பெத்தையா, செ.ராம்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பெருந்தலைவர் காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் சத்தியமூர்த்திபவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவை தனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    ஏற்கனவே செல்வப்பெருந்தகை சொத்து மீட்பு குழுவில் இருந்த போது 2016-17-ம் ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு சொத்துக்களை அடையாளம் கண்டு அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சேகரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    இப்போது மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவும் ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் இந்த சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.
    • எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    தூத்துக்குடி:

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே.வி. தங்கபாலு இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக காவல்துறையினர் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்காக வந்துள்ளேன். இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.

    நண்பர் ஜெயக்குமார் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். அவருடைய மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயல் நடந்திருக்கக்கூடாது. இதைபற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.

    தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது. நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.

    விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட வேண்டும். உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. காங்கிரஸ் கட்சியின் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று கடிதத்தில் இருப்பது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், எனது அரசியல் அனுபவத்தில் எந்த காங்கிரஸ்காரர்களிடமும் நான் பணம் வாங்கியதும் கிடையாது. வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு கிடையாது என்றார்.

    • விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படும்.
    • விருது முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

    பெருந்தலைவர் காமராசர் விருது 2006-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வரிசையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதுக்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமிழக காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளராகவும், கட்சித் தலைவராகவும் மத்திய இணை அமைச்சராகவும், ஒரு முறை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இருமுறை பாராளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியதோடு கடந்த 50 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுவரும் கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படும். இவ்விருது முதலமைச்சரால் திருவள்ளுவர் திருநாளான 15.1.2025 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளார்.

    ×