என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழு- செல்வப்பெருந்தகை அறிவிப்பு
    X

    தங்கபாலு தலைமையில் காங்கிரஸ் சொத்து மீட்பு குழு- செல்வப்பெருந்தகை அறிவிப்பு

    • அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன.
    • சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துக்களை மீட்பதற்காக முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமையில் 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஒப்புதலுடன் இந்த குழுவின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார்.

    கே.வீ.தங்கபாலு-தலைவர், எம்.கிருஷ்ண சாமி-இணைத் தலைவர், கே.எஸ்.அழகிரி-இணைத் தலைவர், எஸ்.ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., டாக்டர் ஏ.செல்லக்குமார், பி.மாணிக்கம் தாகூர் எம்.பி., கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராமசுப்பு, கே.ராணி, வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, பெ.விஸ்வநாதன், எம்.கிறிஸ்டோபர் திலக், கோபி நாத் பழனியப்பன், வி.கே.அறிவழகன், ரூபி.ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., ஜே.எம்.எச்.அசன் மவுலானா எம்.எல்.ஏ., தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., சி.டி.மெய்யப்பன், டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரன், ஆர்.எம்.பழனிசாமி, எஸ்.சுஜாதா, கே.விஜயன், பென்னட் அந்தோணிராஜ், வழக்கறிஞர் ஏ.பி.சூரியப் பிரகாசம், வழக்கறிஞர் ஓ.எம்.ஆர்.பழனிவேல், பி.பாட்ரிக் ராஜ்குமார், தாம்பரம் எஸ்.நாராயணன், வி.எஸ்.கமலிகா காமராஜர், லெனின் பிரசாத், தலைமையக ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் சொர்ணா சேதுராமன், வழக்கறிஞர் டி.செல்வம், வழக்கறிஞர் என்.அருள் பெத்தையா, செ.ராம்மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    தமிழக காங்கிரஸ் கட்சிக்கு பெருந்தலைவர் காமராஜர் சேர்த்து வைத்த சொத்துக்களின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.4 ஆயிரம் கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளார்கள். சென்னையில் மட்டும் சத்தியமூர்த்திபவன், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட சொத்துக்களின் மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. இது தவிர அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசுக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இவை தனியார்களின் ஆக்கிரமிப்பில் உள்ளன.

    ஏற்கனவே செல்வப்பெருந்தகை சொத்து மீட்பு குழுவில் இருந்த போது 2016-17-ம் ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு சொத்துக்களை அடையாளம் கண்டு அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சேகரித்து டெல்லி மேலிடத்துக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

    இப்போது மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவும் ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் இந்த சொத்துக்கள் மீட்பு எப்போது? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    Next Story
    ×