என் மலர்
நீங்கள் தேடியது "புரட்டாசி அமாவாசை"
- பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
- காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர்:
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.
மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுக்க தவறியவர்கள் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே உள்ளது.
அதன்படி இன்று மகாளய அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட நீர்நிலைகளில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
தஞ்சையில் கல்லணை கால்வாய் படித்துறையிலும் திரளான பொதுமக்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கும்பகோணம் மகாமகக்குள கரையிலும் மகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடலிலும், கோடியக்கரை ஆதிசேது கடலிலும், வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மணிக்கர்ணிகை தீர்த்தத்திலும் புனித நீராடி வழிபட்டனர்.
பச்சரிசி, எள், காய்கறிகள், அகத்திக்கீரை உள்ளிட்ட பொருட்களை வைத்து திதி, தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள மணிக்கர்ணிகையை தீர்த்தத்தில் இருந்து மோட்டார் மூலம் பக்தர்கள் மீது நீர் தெளிக்கப்பட்டது. அமாவாசையை ஒட்டி வேதாரண்யம் காவல்துறையினர், கடலோர காவல் நிலைய காவலர்கள், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் வேதாரணயம் கோடிக்கரைக்கு பல்வேறு பகுதிகளில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
- சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர்.
- ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை அருகே பழமை வாய்ந்த அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
குரும்புக்கோட்டை மன்னன் பட்டம் என்ற பெயர் கொண்ட 2-ம் குலோத்துங்கன் திருவ நகரத்தில் பெண் எடுக்க சென்றபோது இருவேளையும் திருஅரங்கனை தரிசித்த திருமண பெண்ணுக்கு திருமணத்துக்கு பின் அப்பெருமானை தரிசிப்பது எப்படி? என பெண் வீட்டார்கள் கேட்க, குலோத்துங்கனும் கவலை வேண்டாம் ஸ்ரீரங்கரைப் போல அதே மாதிரி கோவிலை அதிகாபுரியில் நிறுவிய பின் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார்.
அதன்படி காவிரி-கொள்ளிடம் ஆறுகளின் இடையே அரங்கன் இருப்பதுபோல திருவதிகையில் கருடன் நதி-தென்பெண்ணையாற்றின் நடுவில் அதிகாபுரியில் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு 2-ம் குலோத்துங்கனின் திருமணம் நடந்ததாக வரலாறு கூறுகிறது.
அரங்கன் ஆலயம் தோன்றுவதற்கு முன்பு இந்த இடத்தில் அய்யனார் சிலை இருந்ததாகவும், அவர் காவல் தெய்வமாக வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதை நினைவு கூறும் வகையில் மூலவர் சன்னதி மகாமண்டபத்தின் முகப்பில் அய்யனார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது. மூலவர் ஸ்ரீரங்கன் வார்த்தைகளால் எட்டமுடியாத நெடுமால் இங்கே பாம்பணையில் பள்ளிகொண்டவந்தாய் அனந்தசயன விமானத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் அருள் பாலிக்கிறார்.
சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி, பிருகு மகரிஷி தவம் செய்யும் நிலையில் உள்ளனர். இந்த கோவிலில் உள்ள தாயார் அரங்கநாயகி, அமிர்தவல்லி, அதிகவல்லி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மூலவர் சிலை 8 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக அஷ்டோத்திரம் அர்ச்சனை செய்தல், புது மலர்கள் சாத்துதல், வஸ்திரங்கள் சாத்துதல், பால் பாயாசம் அமுது செய்தல் போன்றவற்றை செய்கின்றனர்.
இந்த கோவிலில் உள்ள ஆண்டாள் பல்லவர் கால படைப்பு சத்திரமாய் காட்சி அளிக்கிறார். ராமர் சன்னதி மிகவும் பழமை வாய்ந்தது. இங்குள்ள சிற்பங்கள் உயிரோவியமாய் காட்சி அளிக்கின்றன. இங்கு மூலவர், உற்சவ மூர்த்திகளாய் ராமர் எழுந்தருளியுள்ளார். சக்கரத்தாழ்வார் சன்னதியில் சக்கரத்தாழ்வாரின் ஒருபுறம் சுதர்சன ஆழ்வாரும் மறுபுறம் யோக நரசிம்மரும் அருள் புரிகின்றனர். கோவிலின் எதிரே திருக்குளமும், அனுமார் சன்னதியும் உள்ளன. மாதாந்திர திருக்கார்த்திகையில் சக்கரத்தாழ்வாருக்கு சுதர்சன ஹோமம் நடைபெற்று வருகிறது. பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரம் போது மூலவருக்கு அவதார நட்சத்திரம் திருமஞ்சனம் நடைபெறும்.
குழந்தை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீரங்கநாயகியிடம் சகஸ்ர நாம அர்ச்சனையும், பால் பாயசமும் அமுது படைப்பதாய் வேண்டி அவ்வாறே குழந்தை பேறு பெற்றதுடன் தங்கள் நேர்த்தி கடனை செய்கின்றனர். புது வஸ்திரமும் சமர்ப்பிக்கின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரும், ஆறாவமுதம் பொதிந்த கோவில் என்று சிறப்பு பெற்றது இந்த கோவில்.
தினமும் காலை 7 மணி முதல் 11.30 வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். இந்த கோவில் பண்ருட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
- புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
- முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது.
புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. சிவபெருமான், விஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாடு புரட்டாசியில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
குறிப்பாக புரட்டாசி என்றதுமே அனைவருக்கும் முதலில் திருப்பதி ஏழுமலையான் வழிபாடுதான் நினைவுக்கு வரும். அதனால்தான் புரட்டாசி மாதத்தை "பெருமாள் மாதம்" என்று சொல்கிறார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் மிக, மிக சக்தி வாய்ந்தது.
இந்த ஆண்டு செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11-ந்தேதிகளில் 4 புரட்டாசி சனி வருகிறது. இந்த 4 சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது புண்ணியத்தை இரட்டிப்பாக்கி தர வல்லது. என்றாலும் பெருமாள் பக்தர்கள் புரட்டாசி மாதம் முழுவதும் வழிபாடு செய்வதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
புரட்டாசியில் சனிக்கிழமை விரதம் தவிர அனந்த விரதம், ஏகாதசி விரதம் உள்பட ஏராளமான விரதங்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாளுக்கு இணையாக சிவபெருமானுக்கும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
அது போல அம்பாளுக்கு உகந்த நவராத்திரி வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை 9 நாட்கள் வழிபாடும் புரட்டாசியில் வர உள்ளது. அதோடு லலிதா சஷ்டி விரதம், உமா மகேஸ்வரி விரதம், கேதார கவுரி விரதம் ஆகியவையும் அம்பாளுக்கு உகந்த புண்ணிய தினங்களாகும்.
புரட்டாசியில் வரும் தூர்வாஷ்டமி விரதம், ஜேஷ்டா விரதம் ஆகிய இரு விரதங்களும் விநாயகப் பெருமானுக்கு உரியவையாகும். இந்த நாட்களில் விநாயகரை வழிபட்டால் அவரது அருளை முழுமையாகப் பெறலாம்.
இவை மட்டுமின்றி முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த மகாளய பட்சமும் புரட்டாசி மாதம்தான் வருகிறது. மகாளய பட்ச நாட்களில் முன்னோருக்கு உரிய தர்ப்பணம் கொடுத்தால் பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெற முடியும். இப்படி தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து புரட்டாசியில் கிடைப்பதால் இந்த மாதம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதை உணர்ந்து, புரட்டாசியில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால் உரிய பலன்களை பெற முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
புரட்டாசி மாதம் வரும் அஷ்டமிக்கு சம்புகாஷ்டமி என்று பெயர். அன்று தயிர் மட்டும் அருந்தி சிவபூஜை செய்தால் சகல சவுபாக்கியங்களையும் பெற முடியும்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் சித்தி விநாயக விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை இல்லாமல் போய் விடும்.
புரட்டாசி மாதம் எந்த விரதம் இருந்தாலும் செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய மூன்றும் குறைவின்றி கிடைக்கும். புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தினம் முதல் ஓராண்டுக்கு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சித்து வழிபட்டால் உடல் வலிமை உண்டாகும்.
புரட்டாசி சனிக்கிழமையன்று நாம் பெருமாளை வழிபடும் போது, ''திருவேங்கடமலையில் வாசம் செய்யும் சீனிவாசப் பெருமாளே நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகா லட்சுமி வசிக்கும் அழகான மார்பை உடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம் போல நன்மைகளை பொழிபவரே, சீனிவாசா உமக்கு நமஸ்காரம்....'' என்று மனம் உருக சொல்லி வழிபட வேண்டும். இந்த துதியை சொல்ல, சொல்ல சகல செல்வங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
புரட்டாசி மாதம் பிறந்த ஆன்மிகப் பெரியவர்களில் வள்ளலார் குறிப்பிடத்தக்கவர். அவர் கடலூர் மாவட்டம் மருதூரில் ராமைய்யா-சின்னம்மை தம்பதிக்கு 1823-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 21-ந்தேதி மகனாகப் பிறந்தார்.
புரட்டாசி பவுர்ணமி தினத்தன்று அம்பாளுக்கு 4 வண்ணங்களில் ஆடையும் ரத்தினக்கல் ஆபரணமும் அணிவித்து வழிபட வேண்டும். அன்று அம்பாளுக்கு நைவேத்தியமாக இளநீர் படைக்க வேண்டும். இந்த பூஜையால் குடும்பத்துக்கு தேவையான செல்வங்கள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் குலதெய்வ அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதம் சங்கட ஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகரை நினைத்து விரதம் கடைபிடித்தால் சுகபோக வாழ்வு கிடைக்கும்.
கடவுளுக்கு காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன்கள் செலுத்த புரட்டாசி மாதமே சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
- மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும்.
- அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும்.
ஆடி அமாவாசையை இந்துக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். நம்மில் பலருடைய முன்னோர்கள் (இறந்துபோன நமது தாத்தா, பாட்டி= சிலருக்கு அம்மா, அப்பா) இந்த நாளில் நம்முடைய கடமையைச் செய்கிறோமா? என்பதை விண்ணில் இருந்து கவனித்துக்கொண்டிருப்பார்கள். கலியுகமான நாம் வாழும் யுகத்தில் மட்டுமே அவர்கள் அவ்வாறு கவனிப்பதை நம்மால் நேரடியாகப்பார்க்க முடியாது. ஆனால், உணர முடியும்.
நமது அம்மாவின் அப்பா, அம்மா மற்றும் அப்பாவின் அம்மா, அப்பாக்களின் அல்லது தாத்தாக்கள், பாட்டிகளின் நினைவு நாட்களை திதியின் அடிப்படையில் நினைவிற்கொண்டு, அந்த தமிழ் மாதத்தில் அந்த திதி வளர்பிறைதிதியா? அல்லது தேய்பிறைத் திதியா? என்பதை ஆஸ்தான ஜோதிடர் மூலம் அறிந்து பழமையான சிவாலயங்களுக்குச் சென்று அன்னதானம் செய்ய வேண்டும்.
இது நான்கு யுகங்களாக நமது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. காலப்போக்கில், நமது முன்னோர்கள் இறந்த நாட்களை மறந்து விடுவதால் மொத்தமாக முன்னோர்களுக்கு அன்னதானம் செய்ய மூன்று முக்கிய நாட்களை நமது முன்னோர்கள் சிவபெருமானின் ஆசியோடு தேர்ந்தெடுத்துள்ளனர். அவைகள்:- ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவசை.
ஒவ்வொரு ஆடி அமாவாசையன்றும் வடபாரதத்தில் காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் நதிக்கரையோர சிவாலயங்கள் முழுவதும் அதிகாலையில் நீராடி அன்னதானம் செய்வது வழக்கம். தென்பாரதத்தில் ராமேஸ்வரம், காவிரிக்கரையோரம், சதுரகிரி, அண்ணாமலை மற்றும் ஏராளமான சிவாலயங்களில் கடலில் அல்லது நதியில் அல்லது வீட்டில் நீராடி சிவனை வழிபட்டு அன்னதானம் செய்வது வழக்கம் ஆகும்.
ஆன்மீகக்கடல் வாசக, வாசகிகளான நாம் செய்ய வேண்டியது என்ன?
வீட்டில் அல்லது பழைமையான சிவாலயத்தில் இருக்கும் கடல் அல்லது நதி அல்லது சுனையில் நீராட வேண்டும். சிவாலயம் அல்லது நமது வீட்டில் தனியறையில் பின்வரும் மந்திரத்தை குறைந்தது 1 மணி நேரம் அதிகபட்சமாக 12 மணி நேரம் ஜபிக்க வேண்டும். (ஒரு மணி நேரத்துக்கு 10 நிமிடம் இடைவெளிவிட்டுக் கொள்வது நல்லது).
சிவாலயம் எனில், அங்கே இருக்கும் கால பைரவர் அல்லது சொர்ண பைரவர் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும். பின்வரும் மந்திரத்தை விடாமல் ஜபிக்கவும். முதலில் ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் (உங்கள் இஷ்டதெய்வத்தின் பெயர்) நமஹ என்று ஒருமுறையும், அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறையும் ஜபித்துவிட்டு ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று குறைந்தது ஒரு மணிநேரம் வரையிலும், அதிகபட்சம் 5 அல்லது 12 மணி நேரம் வரையிலும் ஜபிக்கவும்.
ஒரு மணி நேரம் வரை ஜபித்ததும், அருகில் இருக்கும் உணவகத்துக்குச் சென்று குறைந்தது 3 அதிகபட்சம் 27 காலை உணவுப்பொட்டலங்களை வாங்கி கோவில் வாசலில் இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்யவும். காலை அன்னதானத்தை காலையில் 6 மணி முதல் 8 மணிக்குள்ளும், மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள்ளும், இரவு 7 மணி முதல் 9 மணிக்குள்ளும் இவ்வாறு ஒவ்வொரு முறையும் அன்னதானம் செய்யவும்.
இந்த அன்னதானம் செய்யும் நேரத்தை மட்டும் ஓய்வாக எடுத்துக்கொள்ளவும். மீதி நேரங்களில் கால பைரவர் அல்லது ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அமர்ந்து கொண்டு, ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்று ஜபித்துக்கொண்டே இருக்கவும். ஜபித்து முடித்ததும் ஒரு இளநீர் அருந்தவும். இந்த வழிமுறையை தமிழ்நாட்டுக்குள் இருப்பவர்கள் பின்பற்றலாம்.
வீடு எனில், வீட்டில் தெற்குபக்கச் சுவரில் மஞ்சளில் ஒரு சூலாயுதம் வரையவும். அந்த சூலாயுதத்தின் மீது குங்குமத்தால் மீண்டும் ஒரு சூலாயுதம் வரையவும். இது பைரவரின் சின்னம் ஆகும். மேலே கூறியது போல மந்திரங்களை அந்த சூலாயுதத்தைப் பார்த்தவாறு ஜபிக்கவும். அருகில் இருக்கும் அனாதை இல்லம் அல்லது சிவாலயம் அல்லது ஆதரவின்றி வாழ்ந்து வரும் முதியவர்கள் இவர்களில் யாருக்காவது அன்னதானம் (வீட்டில் சமைத்தது) செய்ய வேண்டும். இந்த முறையை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருப்பவர்கள் பின்பற்றலாம்.
இந்த நாள் முழுக்க யாரையும் திட்டக் கூடாது; காம ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது; பொறாமைப்படக்கூடாது.






