என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளென் மெக்ராத்"

    • இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
    • ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. 3-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா செயல்பாடு குறித்து முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    பேட்டிங் வரிசையில் ஒவ்வொருவரும் ரன்கள் குவிக்க வேண்டும். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசேஞ்ச் ஆகிய வீரர்களை மட்டுமே ஆஸ்திரேலியா நம்பியுள்ளது. இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.

    இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பது குறித்த கேம் பிளானில் அவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்று நினைக்கிறேன். ஏற்கனவே தோற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    இந்தியாவில் அதிக ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோர் முதல் 2 டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் பெறாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்திய மைதானங்களில் எப்படி ஆட வேண்டும் என்று இந்திய வீரர்களுக்கு நன்கு தெரியும். இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியடையாமல் இருந்தாலே அது ஆஸ்திரேலியா செய்யும் சாதனையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    என்று மெக்ராத் கூறியுள்ளார்.

    • கடந்த சில தொடர்களில் அவரால் போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை.
    • அதிக ரன்கள் குவிக்காததால் கோலிக்கு இந்த தொடரில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.

    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் கிளென் மெக்ராத் கூறியதாவது:-

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே சவால் நிறைந்ததாக இருக்கும். இந்தத் தொடரில் முன்னணி வீரர்கள் ரன் குவிப்பது கடும் சவாலாக இருக்கும்.

    தற்போதுள்ள வீரர்களில் விராட் கோலி மிகச் சிறந்தவர் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் எனக்கு தெரிந்தவரை அவர் மிகவும் அழுத்தத்தில் இருக்கிறார். கடந்த சில தொடர்களில் அவரால் போதுமான ரன்களை எடுக்க முடியவில்லை. அதிக ரன்கள் குவிக்காததால் கோலிக்கு இந்த தொடரில் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.

    ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரின் முதல் 2 இன்னிங்ஸ்களில் அவர் குறைந்த ரன்னை எடுத்தால் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் தொடர் முழுவதுமே அவரால் சிறப்பாக ஆட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

    இந்த பிரச்சினையை நிச்சயம் கோலியும் உணர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். அவரது மன உறுதியை உடைக்க ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக விமர்சனங்களை வைக்கலாம். களத்தில் அவருடன் வாக்குவாதத்திலோ அல்லது மோதலிலோ ஈடுபட்டால், அவரால் அதிக ரன் குவிக்க வாய்ப்புகள் இருக்கிறது. கோலி ஒரு உணர்ச்சிப்பூர்வமான கிரிக்கெட் வீரர். சிறப்பாக விளையாடும் போது மிகவும் உச்சத்தில் இருப்பார்.

    நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்ததால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தம் இருப்பது குறித்து எந்த சந்தேகமும் வேண்டாம். அதனால் தொடக்கம் முதலே திட்டங்களுடன் இந்திய அணியை பலவீனமடைய செய்தால், ஆஸ்திரேலியாவால் எளிதாக தொடரை கைப்பற்ற முடியும்.

    எனவே இந்த தொடர் இந்தியாவுக்கு மிகவும் சவாலான தொடர்தான். அதே நேரத்தில் இந்திய அணியில் மிகச்சிறந்த வீரர்கள் இருப்பதால் ஆஸ்திரேலியாவும் பொறுப்புடன் விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் விராட் கோலி 34 டெஸ்டில் 31.68 ரன் சராசரியுடன் 1,838 ரன்கள் எடுத்துள்ளார்.

    அவர் மொத்தமாக 118 டெஸ்டில் 9,040 ரன்களை குவித்துள்ளார். சராசரி 47.83 ஆகும். ஆஸ்திரேலியாவுடன் 25 டெஸ்டில் ஆடி 2,042 ரன்களை எடுத்து உள்ளார். அந்த அணிக்கு எதிராக ஓர் இன்னிங்சில் அதிகபட்சமாக 186 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×