என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்"

    • வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.

    சென்னை:

    சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் வாக்காளர்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள் என்ன? என்பது பற்றி தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான அனைத்து வாக்காளர்களுக்கும் வீடு, வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

    இந்த படிவங்களை நிரப்புவதற்கு வசதியாக 2002 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் தேடல் வசதி செய்யப்பட்டுள்ளது. https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அதை காணலாம். வாக்காளர் அடையாள அட்டை நம்பரை பயன்படுத்தி தங்களின் விவரங்களை தேடிக்கொள்ளலாம்.

    இந்த கணக்கீட்டு படிவம் குறித்த சந்தேகங்கள் எழுந்தால் வாக்காளர் உதவி நம்பரான 1950 மற்றும் வாட்ஸ்அப் குறைதீர் நம்பரான 9444123456 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் எழும் சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலரையும் தொடர்பு கொள்ளலாம்.

    இதற்காக ECINET செயலி அல்லது https://www.voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு, book a call with BLO என்ற விருப்பத்தை தேர்ந்தெடுத்து, செல்போன் நம்பரை அதில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் இருந்து வாக்காளருக்கு போன் அழைப்பு வரும்.

    கடந்த தீவிர திருத்த பட்டியல்களில் பெயர் இருந்தால், கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்ட விவரங்களான, வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்), உறவினரின் பெயர், உறவு (முறை), மாவட்டம், மாநிலம், சட்டமன்ற தொகுதி பெயர், எண், பகுதி எண், வரிசை எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

    கணக்கீட்டு படிவத்தில் ஏற்கனவே சில விவரங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். அதில் புகைப்படமும் இருக்கும். அதில் கூடுதலாக, பிறந்த தேதி, ஆதார் எண் (விருப்பம்), செல்போன் எண், தாய் அல்லது தந்தை அல்லது கணவர் அல்லது மனைவியின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண் (இருந்தால்) அவற்றை வாக்காளர் குறிப்பிட வேண்டும்.

    இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.

    • பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
    • வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி தமிழ்நாட்டில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்ப படிவங்கள் கொடுக்கும்போது குழப்பம் ஏற்படுவதாகவும், பணியாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து சென்னை மாநகராட்சி ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் அவர்கள் தலைமையில் இயங்கும் வாக்காளர் பதிவு அலுவலக உதவி மையங்களின் போன் நம்பர்களை வெளியிட்டுள்ளது.

    இந்த போன் நம்பர்களில் தொடர்பு கொண்டு அந்தந்த தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கான உதவி மைய எண்கள் விவரம் வருமாறு:-


    எண் தொகுதி போன் நம்பர்
    1 ஆர்.கே.நகர் 9445190204, 8072155700
    2 பெரம்பூர் 9445190204, 8015959489
    3 கொளத்தூர் 9445190206, 7812811462
    4 வில்லிவாக்கம் 9445190208, 7845960946
    5 திரு.வி.க.நகர் 9445190206, 9791755291
    6 எழும்பூர் 9445190205, 9941634048
    7 ராயபுரம் 9445190205, 7867070540
    8 துறைமுகம் 9445190205, 8778381704
    9 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி 9445190209, 9884759592
    10 ஆயிரம்விளக்கு 9445190209, 9626150261
    11 அண்ணாநகர் 9445190208, 8680973846
    12 விருகம்பாக்கம் 9445190210, 7358275141
    13 சைதாப்பேட்டை 9445190213, 7358032562
    14 தியாகராயநகர் 9445190210, 7418556441
    15 மயிலாப்பூர் 9445190209, 9789895378
    16 வேளச்சேரி 9445190213, 9499932846
    17 மதுரவாயல் 9445190091
    18 அம்பத்தூர் 9445190207
    19 மாதவரம் 9003595898
    20 திருவொற்றியூர் 9445190201
    21 சோழிங்கநல்லூர் 9445190214, 9445190215
    22 ஆலந்தூர் 9445190212


    • தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் S.I.R. நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
    • கடந்த 4-ந்தேதி தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது தொடங்கியது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. சார்பாக அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

    S.I.R. நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் சீராய்வு மேற்கொள்வதை ஏற்க முடியாது. பண்டிகை காலத்தில் செய்யப்படும் பணியால் பலர் தங்கள் வாக்குகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பீகார் S.I.R. தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையிலும் S.I.R. நடவடிக்கை மேற்கொள்வது ஏற்க முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே, கடந்த 4-ந்தேதி தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியானது தொடங்கியது. இதனை தொடர்ந்து, தி.மு.க. தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எப்போது நடைபெறும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில், S.I.R. நடைமுறைக்கு எதிராக தி.மு.க. தரப்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கந்தர்வகோட்டையில் வாக்காளர் பெயர் சேர்க்கும் முகாம் நடை பெற்றது.
    • முகாமில் 18 வயதில் நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மற்றும் ஆதார் எண் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களுக்கான 375 மனுக்கள் முகாம் அலுவலர்களால் பெறப்பட்டது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகாவில் 88 வாக்கு சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெற்றது.

    முகாமில் 18 வயதில் நிறைவடைந்தவர்கள் தங்களின் பெயர்களை சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மற்றும் ஆதார் எண் சேர்த்தல் உள்ளிட்ட திருத்தங்களுக்கான 375 மனுக்கள் முகாம் அலுவலர்களால் பெறப்பட்டது.

    வாக்கு சாவடி மையங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பாளர் வள்ளலார், கோட்டாட்சியர் செல்வி, புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலர் கருணாகரன், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, தாலுகா தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தனர்.

    ×