என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராக்கிங்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர செய்தனர்.
    • முதலாம் ஆண்டு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    வேலூர்:

    வேலூர் பாகாயத்தில் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். ராக்கிங் கொடுமைகள் அனைத்தும் வீடியோவில் பரவி வருகிறது.

    முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர செய்தனர். அவர்கள் ஓடி வரும்போது தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம் செய்துள்ளனர்.

    அப்போது தண்டால் போட வைத்தும் குட்டிக்கரணம் அடிக்கவும் அவர்களை மிரட்டியுள்ளனர்.அதனை கண்டு பயந்து போன முதலாம் ஆண்டு மாணவர்கள் குட்டிக்கரணம் போட்டனர். அவர்கள் கூறியபடி தண்டால் எடுத்தனர்.

    மேலும் இரண்டு மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சொன்னார்கள்.

    அவர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். அப்போது அது சரியில்லை என்று கூறி மீண்டும் மீண்டும் முத்தம் கொடுக்க வைத்தனர்.

    அந்த வீடியோ தற்போது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்பட்ட இந்த கொடுமைகள் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் முதலாம் ஆண்டு மாணவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதி வார்டன் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    அந்தக் கடிதத்தில், "மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்தனர்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    அவர்கள் உடல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

    டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக மருத்துவக் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

    முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் ராக்கிங் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    இந்த தொடர்பாக சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    வேலூர்:

    வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர்.

    முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரம் செய்துள்ளனர்.

    குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்து ராக்கிங் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

    மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் கடிதம் வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    ராக்கிங் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி முதலாம் ஆண்டு மாணவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் எங்களுடைய மருத்துவ கல்லூரி விடுதியில் ராக்கிங் செய்யப்பட்டதாக வீடியோ மற்றும் மொட்டை கடிதத்தில் புகார் வந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்தி 7 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    மேலும் இது குறித்த விவரங்களையும் இணைத்துள்ளோம். இந்த ராக்கிங் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக பாகாயம் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். முதல் கட்டமாக மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களிடம் விசாரணையை தொடங்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • பாகாயம் போலீசார் மாணவர்கள் 7 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்தனர்.

    முதலாம் ஆண்டு மாணவர்களை அரை நிர்வாணப்படுத்தி டவுசருடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டுள்ளனர்.

    குட்டிக்கரணம், தண்டால் எடுப்பது, மாணவர்கள் கட்டி பிடித்து முத்தம் கொடுக்க செய்து ராக்கிங் கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. மேலும் மருத்துவ கல்லூரி நிர்வாகத்திற்கு புகார் கடிதம் வந்தது. இதனை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர் சார்பில் பாகாயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக பாகாயம் போலீசார் மாணவர்கள் 7 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    வேலூர் தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக மாணவர்கள் 7 பேர் மீது 2 பிரிவுகளில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    7 பேரும் ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

    • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

    ராகிங் (கேலிவதை) நடவடிக்கையால், புதிய மாணவ மாணவிகள் மோச மான பாதிப்புகளை அடை கின்றனர். இந்த ராகிங் முறை தொடக்கக் காலத்தில், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும், காலப் போக்கில், வன்மு றைச் செயல்களுக்கும், குற்றங்களுக்கும் வித்திடு வதாக அமைந்துவிட்டது.

    ராகிங் செய்வதை, பேச்சு, உடல் மற்றும் பாலி யல் ரீதியான துன்புறுத்தல் என 3 வகையாக பிரிக்க லாம். உடல் ரீதியான துன்புறுத்தல், இறப்புக்கு காரணமாக உள்ளது. அதற்கு, நாவரசு கொலை வழக்கு உதாரணம். மாண வர்களாகிய நீங்கள், எப்பே தும் ராகிங்கில் ஈடுபடக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவர் களுடன் , அன்பு பாராட்டி, தோழமை உணர்வுடன் பழக வேண்டும் என கூறினார்.

    சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் தலைவர் ராமசெழியன், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர், ராகிங் தடுப்பு சட்டம் பற்றியும், வழக்கு பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கினர். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.

    • சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.
    • விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் பச்சையப்பன் நகா் முதல் வீதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவரது மனைவி வேலுமணி. இவா்களது மகன் சத்யநாராயணன் (வயது 21) .கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தாா்.

    நேற்று வீட்டின் மாடியில் உள்ள அறையில் சத்ய நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே சத்ய நாராயணன் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் சிலருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆடியோ பதிவு ஒன்றை அனுப்பி உள்ளார்.

    அதில், ஒரு மாணவரின் பெயரை குறிப்பிட்டு அவா் தொடா்ந்து மிரட்டுவதாகவும், வகுப்பறையில் வைத்து அடித்ததில் இருந்து தன்னால் தூங்க முடியவில்லை. இது குறித்து கல்லூரியில் புகாா் தெரிவித்தால், வெளி ஆட்களை அழைத்து வந்து என்னை ஏதாவது செய்து விடுவாா்களோ? என்று பயமாக உள்ளது. ஆகவே, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் எனக்கு வருகிறது என பதிவாகியிருந்தது.

    எனவே சத்யநாராயணன் 'ராக்கிங்' காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இது தொடர்பாக 3 மாணவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிவில் சத்யநாராயணன் தற்கொலைக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×