search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prevention awareness"

    • நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவ, மாணவியருக்கான ராகிங் தடுப்பு சட்ட விழிப் புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நாமக்கல் சார்பு நீதிபதி விஜய் கார்த்திக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:

    ராகிங் (கேலிவதை) நடவடிக்கையால், புதிய மாணவ மாணவிகள் மோச மான பாதிப்புகளை அடை கின்றனர். இந்த ராகிங் முறை தொடக்கக் காலத்தில், புதிய மாணவர்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் இருந்தாலும், காலப் போக்கில், வன்மு றைச் செயல்களுக்கும், குற்றங்களுக்கும் வித்திடு வதாக அமைந்துவிட்டது.

    ராகிங் செய்வதை, பேச்சு, உடல் மற்றும் பாலி யல் ரீதியான துன்புறுத்தல் என 3 வகையாக பிரிக்க லாம். உடல் ரீதியான துன்புறுத்தல், இறப்புக்கு காரணமாக உள்ளது. அதற்கு, நாவரசு கொலை வழக்கு உதாரணம். மாண வர்களாகிய நீங்கள், எப்பே தும் ராகிங்கில் ஈடுபடக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவர் களுடன் , அன்பு பாராட்டி, தோழமை உணர்வுடன் பழக வேண்டும் என கூறினார்.

    சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பின் தலைவர் ராமசெழியன், துணை தலைவர் பழனிசாமி ஆகியோர், ராகிங் தடுப்பு சட்டம் பற்றியும், வழக்கு பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கினர். கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர்.

    ×