என் மலர்
நீங்கள் தேடியது "இயேசு கிறிஸ்து"
- ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா.
- சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு.
நம் மனித வாழ்வு விசுவாசம் என்னும் அடித்தளத்தில் தான் கட்டப்பட்டு வருகிறது. விசுவாசம் நிறைந்த வாழ்வில் அன்பும், நற்பண்புகளும், நல்ல புரிதல்களும் நிறைந்திருக்கிறது.
ஆனால், பல நேரங்களில் நம் வாழ்வில் அவிசுவாசம் மேலோங்கி காணப்படுகிறது. கற்றவர், கல்லாதவர், ஏழை, பணக்காரன் என்று எவ்வித வேறுபாடுமின்றி அனைவரிடமும் இந்த அவிசுவாசம் காணப்படுகிறது. திருமறையில் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தோமா ஆவார்.
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவர் தான் தோமா. பிலிப்புவின் மூலமாக ஆண்டவர் இயேசுவுக்கு அறிமுகமானவர். தோமா என்கிற அரமேய சொல்லின் பொருள் `இரட்டையர்' என்பதாகும். திதிம் என்ற மறுபெயரும் இவருக்கு உண்டு. இவர் இயேசு கிறிஸ்துவின் தீவிர விசுவாசியாகவே இருந்து வந்தார்.
இயேசு கிறிஸ்துவின் சிநேகிதனாகிய லாசர், பெத்தானியாவில் வியாதியாயிருக்கிறதைக் கேள்விப்பட்ட பின்பும் தாம் தங்கியிருந்த இடத்திலே இரண்டு நாள் தங்கினார். பின்னர் அவர் தம் சீடர்களிடத்தில், 'நாம் மறுபடியும் யூதேயாவுக்கு போவோம் வாருங்கள்' என்றார். அதற்கு சீடர்கள், 'ரபீ இப்பொழுது தான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்கு போகலாமா' என்றார்கள்.
அப்பொழுது திதிம் எனப்பட்ட தோமா மற்ற சீடர்களை நோக்கி, 'அவரோடே கூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள்' என்றார் (யோவான் 11:16).
தோமா ஆண்டவருக்காக மரிக்கவும் துணிவதை இங்கே காணலாம். ஆண்டவர் நித்திய வாழ்வை குறித்து பேசுகின்ற பொழுது, 'நான் போகிற இடத்தை அடைந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்' என்றவுடன், தோமா அவரை நோக்கி 'ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம்' என்றார் (யோவான் 14:5).
இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் ஆண்டவரோடு இணைந்து வாழ வேண்டுமென்ற மாபெரும் விருப்பத்தைக் காண முடிகின்றது.
ஆண்டவர் இயேசுவின் மீது பக்தி வைராக்கியம் கொண்டிருந்த தோமா, கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிற்பாடு சந்தேகத் தோமாவாக மறு உருவெடுக்கிறார். ஆண்டவர் இயேசு, தான் உயிர்த்தெழுந்த பிற்பாடு சீடர்களுக்கு தரி சனமானார். ஆண்டவர் அவர்களுக்கு சமாதான வாழ்த்துதல் சொல்லியதோடு, தம் கைகளையும், தன் விலாவையும் அவர்களுக்கு காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள் (யோவான் 20:19).
ஆனால் ஆண்டவர் தரிசனமான இரண்டு முறையும் தோமா அவர்களுடன் இருக்கவில்லை. சீடர்கள் 'கர்த்தரைக் கண்டோம்' என்று நம்பிக்கையுடன் தோமாவிடம் கூறினார்கள். ஆனால், தோமாவோ 'அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்தில் என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே இட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன்' என்றார் (யோவான் 20:25).
மூன்றாம் முறையாக தரிசனமானபோது தோமா அவர் களோடு இருந்தார். இயேசு தோமாவை நோக்கி, 'நீ உன் விரலை இங்கே நீட்டி என் கைகளை பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு' என்றார் (யோவான் 20:27).
தோமா, 'என் ஆண்டவரே, என் தேவனே' என்று அறிக்கை செய்கின்றதை காணலாம். அப்பொழுது ஆண்டவர் 'தோமாவே, நீ என்னை கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள்' என்றார் (யோவான் 20:29).
நம்பிக்கையின்மை தோமாவின் நிலைப்பாடு மட்டுமல்ல; பல சீடர்களும் அன்று அப்படித்தான் இருந்தனர். நம்பிக்கையின்மை விஷயத்தில் ஒட்டுமொத்த சீடர்களின் பிரதிநிதியாகவே தோமா இங்கு தென்படுகிறார்.
'மரியாள் சொன்ன உயிர்ப்பின் செய்தியை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:11).
'ஆண்டவர் மறுரூபமாய் தரிசனமானதை கண்டவர்கள் சொல்லியதை சீடர்கள் நம்பவில்லை' (மாற்கு 16:13).
'உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற் போனதினிமித்தம் அவர்களுடைய விசுவாசத்தைக் குறித்தும், இருதய கடினத்தைக் குறித்தும் அவர் கடிந்து கொண்டார்' (மாற்கு 16:14).
'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1).
தோமாவின் பக்தி வைராக்கியம், மிகுந்த வாஞ்சை, அதீத பாசம் அனைத்தையும் கெடுத்து, 'சந்தேகத் தோமா' என்ற அவப்பெயரை அவருக்கு கொடுத்து விட்டது. காரணம், யூதர்கள் மீது இருந்த பயம், அன்றைக்கு நிலவிய சூழல், எதிராளிகளின் வலிமை, அவர்களுக்கிருந்த செல்வாக்கு போன்றவை ஆகும்.
கடவுளை முழுமையாக விசுவாசிப்போம். சந்தேகத்தை வேரறுப்போம். சந்தேகம் குடும்பங்களை அளிக்கும் நெருப்பு. நம் வாழ்வின் சூழல்கள், பிரச்சினைகள், நெருக்கடிகள், வியாதியின் வேதனைகள் நம்மை சந்தேகத்திற்கு வழிநடத்தக் கூடும்.
ஆனால், நாம் முழுமையாக விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும். காணாமலே விசுவாசிக்கின்ற பாக்கியவான்களாக இருப்போம். விசுவாசத்தினால் நற்சாட்சி பெறுவோம். விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும் (எபிரேயர் 11:6).
- பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத், 'இயேசு கிறிஸ்து' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இயேசு கிறிஸ்து குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த பாஜக பெண் எம்எல்ஏ மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இது தொடர்பாக வரும் 10 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சத்தீஸ்கரின் ஜாஷ்பூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, ஜாஷ்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தெக்னி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத், 'இயேசு கிறிஸ்து' மற்றும் 'மதமாற்றம்' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் ஜாஷ்பூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் எம்.எல்.ஏ. மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி அவருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களின் வாக்குமூலம் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோவை ஆராய்ந்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட ராய்முனி பகத் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதாக என்று தனது உத்தரவில் கூறியது.
மேலும், இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் பாஜக எம்.எல்.ஏ. ரேமுனி பகத் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.
- தேவன், தான் படைத்த படைப்புகளை அதிகமாய் நேசித்தார்.
- பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாக உள்ளன.
இந்த உலகத்தையும், அதில் உள்ள ஒவ்வொன்றையும் தேவன் தன் விருப்பப்படி படைத்தார். அவற்றை நாம் பார்க்கையில் அவை ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிசயமும் தருபவையாக அமைந்துள்ளன. பல படைப்புகள் நமக்கு பிரமிப்பை தருபவையாகவும் உள்ளன.
இவ்வாறு உலகத்தை ஆச்சரியமும் அதிசயமும் நிறைந்ததாக படைத்த தேவன், தான் படைத்த படைப்புகளை அதிகமாய் நேசித்தார். அதனால்தான் தன்னுடைய ஒரே குமரனாகிய இயேசு கிறிஸ்துவையும் இந்த உலகிற்கு அனுப்பி பாடுகள் பல படவும், சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கவும், பின்பும் உயிர்த்தெழவும் அனுமதித்தார்.
இவ்வாறு தன்னுடைய படைப்புகளுக்காக மகனையே தந்த தேவன், பழைய ஏற்பாட்டு காலத்திலும் தன் மக்களுக்காக இயற்கைக்கு மாறான அற்புதங்கள் பலவற்றை செய்து அவர்களுக்கு தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் மழையின்றி, கடுமையான வறட்சி நிலவிய காலத்தில், காகங்களைக் கொண்டு, எலியாவிற்கு காலையிலும், மாலையிலும் அப்பமும் இறைச்சியும் கிடைக்கும் படி தேவன் கிருபை செய்தார். இயற்கையாகவே தனக்கு கிடைக்கும் எந்த உணவை உண்டு பழக்கப்பட்ட காகங்கள், இறைவனின் கட்டளைப்படி இறை தூதராகிய எலியாவிற்கு உணவை கொண்டு வந்து கொடுத்தன.
நீரில் வாழும் சிறிய மீன்களானாலும், பெரிய மீன்களானாலும் தனக்கு கிடைக்கும் எதையும் விழுங்கி, அதை உணவாக உட்கொள்ள கூடியவை. கர்த்தரின் உத்தரவின்படி நினிவேக்கு செல்லாமல், தர்சீசுக்கு கப்பலில் பயணித்த யோனாவை, தேவன் பெரிய மீனைக் கொண்டு விழுங்க செய்து, அதனுடைய வயிற்றில் அமர்ந்து பயணம் செய்யும் படி வைத்தார். கப்பலில் பயணித்த அவரை, மீனின் வயிற்றில் பயணிக்க வைத்து, நினிவே பட்டணத்தில் பத்திரமாக கரையும் சேர்த்தார். அப்படியே யோனாவின் மூலம் கர்த்தர் தான் நேசித்த நினிவே மக்கள் பாவ வாழ்க்கையில் இருந்து மனம் மாறி தன்னை தேடும்படி செய்தார்.
எசேக்கியா அரசர் நோயுற்று மரணப் படுக்கையில் இருந்தபோது, தேவன் அவரது கண்ணீரின் வேண்டுகோளினை ஏற்று, வாழும் காலத்தை பதினைந்து ஆண்டுகள் அதிகரித்துக் கொடுத்தார். அதற்கு அடையாளமாக அவர் கேட்டுக் கொண்டபடி நிழற்கடிகையில் பத்துப்பாகை முன்னோக்கிப் போயிருந்த நிழல், பத்துப்பாகை பின்னோக்கி வரச் செய்தார்.
அதுமட்டுமின்றி நீந்திக் கடக்க வேண்டிய செங்கடலை, இஸ்ரேல் மக்களும் மோசேயும் கால்கள் நனையாதபடி நடந்தே கடக்கும்படி செய்தார்.
"கதிரவனே! கிபயோனில் நில். நிலவே! அய்யலோன் பள்ளத்தாக்கில் நில்" என்ற யோசுவாவின் வேண்டுகோளின்படி, கர்த்தர் நகர்ந்து கொண்டிருந்த சூரியனையும் சந்திரனையும் ஒரே இடத்தில் நிலைத்து நிற்கும்படி செய்தார்.
இவ்வாறு, தான் படைத்த படைப்புகளை, இயற்கையாக அவை கொண்டிருக்கும் இயல்பை மாற்றி, தான் நேசிக்கும் மக்களுக்கு உதவும்படி செய்தார். இன்றும் நாம் விசுவாசத்தோடு தேவனை நோக்கி மன்றாடும்போது நாம் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நபரிடம் இருந்து நமக்கு உதவிகள் கிடைக்க செய்ய வல்லவராய் அவர் இருக்கிறார். நம்மை இவ்வளவு அதிகமாய் அன்பு கூரும் அவரை, நாமும் அன்பு செய்து அவரோடு இணைந்து வாழ்வோம்.
டோனி, சென்னை.






