என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் நிறுத்தும் இடம்"

    • கழிவறை வசதியும் இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    • 24 மணி நேரத்திற்கு வசூலிக்கும் வாகன நிறுத்தும் கட்டணத்தை 6 மணி நேரத்துக்கு வசூல் செய்கிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய மற்றும் பட்டு சேலை எடுக்க தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கிறார்கள். தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    சுற்றுலா வரும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த ஒலிமுகமது பேட்டை, ஏகாம்பரநாதர் கோவில் அருகே தனியாக இடம் உள்ளது. இது சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

    வாகனங்களுக்கு கட்டணமாக 6 மணி நேரத்திற்கு பஸ்சுக்கு ரூ.300, வேனுக்கு ரூ.200, காருக்கு ரூ.150, இருசக்கர வாகனத்துக்கு ரூ.20 என வசூலிக்கப்படுகிறது.

    வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு இலை உள்ளிட்ட குப்பைகளை அங்கேயேபோட்டு விடுகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனை முறையாக அகற்று வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது மேலும் போதுமான கழிவறை வசதியும் இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதனால் அங்குள்ள காவலாளிகளிடம் பக்தர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, காஞ்சிபுரத்திற்கு தினமும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். வாகனம் நிறுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப அங்கு வசதி இல்லை. 2 கழிவறைதான் உள்ளது. அதுபோதுமானதாக இல்லை. கூடுதல் கழிவறை வசதி செய்து தர வேண்டும்.

    பக்தர்களுக்கு ஏற்ப மேலும் போதிய வசதிகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    24 மணி நேரத்திற்கு வசூலிக்கும் வாகன நிறுத்தும் கட்டணத்தை 6 மணி நேரத்துக்கு வசூல் செய்கிறார்கள். கட்டணத்தை மட்டும் வசூல் செய்துவிட்டு சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் தேங்கியும் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது என்றனர்.

    • குண்டேரிபள்ளம் அணையில் சுற்றுலா பயணிகளுக்கு ஓய்வு அறை, குடிநீர், வாகனம் நிறுத்தும் இடம் அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
    • அமைச்சர் முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்துள்ள கொங்கர்பாளையம் ஊராட்சியில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் ஓய்வறை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு கம்பி வேலி அமைத்தல் மற்றும் அணுகு சாலை அமைத்தல் ஆகிய சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நடந்து முடிவடைந்த நிலையில் அமைச்சர் சு.முத்துசாமி சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அப்போது வினோபா நகரை சேர்ந்த விவசாயிகள் விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு, பூமிதான இடத்திற்கு பட்டா உட்பட பல்வேறு அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் தங்களுக்கும் கிடைக்க வேண்டி மனுக்களை அமைச்சர் முத்துசாமியிடம் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், டி.என்.பாளையம் ஒன்றிய பொறுப்பாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.கே.சுப்பிரமணியம், கந்தசாமி, கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, தாசில்தார் ஆசியா, சிட்கோ வாரிய முன்னாள் தலைவரும் ஐகோர்ட்டு வக்கீலுமான சிந்து ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சதிஷ்குமார், உதவி பொறியாளர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ×