என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா பட்ஜெட்"

    • முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.
    • 2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசு நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்தது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 7-ந்தேதி (இன்று) தாக்கல் செய்யப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி கர்நாடக பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

    நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி சித்தராமையா சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த 16-வது பட்ஜெட் ஆகும்.

    2025-2026-ம் ஆண்டுக்கு ரூ.4.09 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியான சில அறிவிப்புகள் சில...

    * தமிழகத்தில் உள்ள அம்மா உணவகத்தை போல் கர்நாடகா முழுவதும் அக்கா உணவகம், அக்கா கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்படும்.

    * சிறுபான்மை பெண்களுக்காக 2024-25 ஆம் ஆண்டில் காலியாக உள்ள வக்ஃப் நிலத்தில் 15 மகளிர் கல்லூரிகளையும், 2025-26 ஆம் ஆண்டில் மேலும் 16 கல்லூரிகளையும் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

    * அனைத்து மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களிலும் அக்கா உணவகங்கள் திறக்கப்படும்.

    * கர்நாடகா முழுவதும் மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள் அதிகபட்சமாக ரூ.200 டிக்கெட் விலையை வசூலிக்கலாம்.

    * பெங்களூரு மெட்ரோ கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகிலுள்ள தேவனஹள்ளி வரை விரிவுபடுத்தப்படும்.

    * பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஹெப்பல் எஸ்டீம் மாலை சில்க் போர்டு சந்திப்பிலிருந்து ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் இணைக்க 18.5 கி.மீ நீளமுள்ள வடக்கு-தெற்கு சுரங்கப்பாதையை அரசு திட்டமிட்டுள்ளது.

    * பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர். மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றம்.

    * கன்னட மொழி திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அரசுக்கு சொந்தமாக OTT தளத்தை தொடங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.

    பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என பட்ஜெட் உரையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ளார். #KarnatakaBudget
    பெங்களூர்:

    கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று பொது பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் அறிவித்தார்.

    மேலும், பெங்களூர் நகரின் குடிநீர் தேவையை சமாளிக்க மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும் என அவர் அறிவித்தார். மேற்கண்ட இரண்டு அறிவிப்புகளுக்கும் அம்மாநில விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். அப்போது ரூ.34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    பெங்களூரு:

    கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தால் முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக பிரச்சாரத்தின்போது குமாரசாமி வாக்குறுதி அளித்தார். ஆனால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையில், காங்கிரசுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. குமாரசாமி முதல்வராக பதவியேற்றார்.

    ஆனால், குமாரசாமி தான் அளித்த வாக்குறுதியின்படி விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றம்சாட்டி வந்தது.  இதற்கு பதில் அளித்த குமாரசாமி, தற்போது கூட்டணி ஆட்சி நடந்து வருவதால், விவசாய கடன் தள்ளுபடி பற்றி காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார்.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் குமாரசாமி இன்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 34 ஆயிரம் கோடி அளவிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இதனால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். #KarnatakaBudget2018 #KarnatakaFarmLoanWaives
    கர்நாடக சட்டசபையில் அடுத்த மாதம் ஜூலை 5-ந்தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும். #KarnatakaBudget #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு மந்திரி கிருஷ்ணபைரே கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்குகிறது.



    முதல் நாளில் கவர்னர் வி.ஆர். வாலா உரையாற்றுகிறார். முதல்-மந்திரியும், நிதித்துறையை கூடுதலாக கவனிப்பவருமான குமாரசாமி ஜூலை 5-ந் தேதி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaBudget #Kumaraswamy
     
    ×