என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சார்க்"

    • பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம்
    • உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.

    தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட சார்க் (SAARC) அமைப்புக்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பாகிஸ்தான் செய்தித்தாள் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்த புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

    இதன் ஒரு பகுதியாக, சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பிரதிநிதிகள் சமீபத்தில் சீன நகரமான குன்மிங்கில் சந்தித்தனர். இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பிற சார்க் நாடுகளை இந்தப் புதிய கூட்டணிக்கு அழைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதன் மூலம் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் புதிய குழுவின் முக்கிய நோக்கம் என்று செய்தித்தாள் கூறியது.

    சார்க் உறுப்பினர்களில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை மற்றும் பூட்டான் ஆகியவை அடங்கும்.

    இந்த அமைப்பு நிறுவப்பட்டால், அது இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு பெரும்பாலும் செயல்படாமல் இருந்த சார்க்கை மாற்றும். 2014 முதல் சார்க் உச்சிமாநாடு நடத்தப்படவில்லை.

    2016 உச்சிமாநாடு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் உரி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.

    வங்கதேசம், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விலகியதால், அந்த உச்சிமாநாடும் ரத்து செய்யப்பட்டது.

    பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கலாமா? என்ற ஆலோசனையில் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. #ImranKhan #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளது. வரும் 11-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.

    ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இதற்கான பணியில் தீயாய் வேலை செய்து வருகின்றன. சீனா, துருக்கி நாட்டு தலைவர்கள் வருகை தருவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

    அதேபோல, இம்ரான்கானும் இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தால் சிக்கல் இல்லை. ஆனால், வராமல் புறக்கணித்துவிட்டால் அவமானம் என்பதால் மிகுந்த ஆலோசனைகள் நடந்து வருகிறது.



    கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் தனது விளையாட்டு காலத்தில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    எனினும், அவர்கள் பங்கேற்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் இம்ரான்கானை தொடர்புகொண்டு பேசிய மோடி, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதனால், மோடியை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றே இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.

    அழைப்பை ஏற்று அங்கே சென்றால் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பதால், வெறும் வாழ்த்து மட்டும் மோடி கூறவும் வாய்ப்பு உள்ளது. திடீரென விமானத்தை எடுத்துக்கொண்டு இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானை கட்டி தழுவி வாழ்த்து கூறவும் வாய்ப்பு உள்ளது.
    ×