search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shivakumar"

    • காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டறிந்து அறிக்கை சமர்பிக்க பார்வையாளர்கள் அறிவிப்பு.

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்த நிலையில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை கேட்டறிந்து கட்சி தலைமைக்கு அறிக்கை சமர்பிக்க மூன்று பேர் அடங்கிய பார்வையாளர்கள் குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    இதுபற்றிய அறிவிப்பில், மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திர சிங் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொது செயலாளர் தீபக் பபாரியா ஆகியோர் சட்டமன்ற கூட்டத்திற்கு பார்வையாளர்களாக செயல்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய அரசை அமைப்பது, அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது.

    முதல்வர் பதவி யாருக்கு என்ற விஷயத்தில் கடந்த சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சித்தராமையா மற்றும் கர்நாடக மாநிலத்துக்கான காங்கிரஸ் கமிட்டி தலைவர் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோர் தங்களுக்கு ஆதரவாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். 

    மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற தேவை இல்லை என கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். #Mekedatu #MinisterShivakumar
    புதுடெல்லி:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இந்நிலையில், டெல்லியில் இதுகுறித்து கர்நாடக நீர்வளத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்ப்பதற்காகவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம். இதில் நீர் ஆணையம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும். இதற்கு தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை.

    நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு, நடுவர் மன்றம் ஆகியவற்றின் உத்தரவை மீறவில்லை. தன்னிச்சையாக செயல்படவில்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது. இந்த விவகாரத்தில், தமிழகத்துடன் சண்டையிட விரும்பவில்லை. நட்புறவையே விரும்புகிறோம். தமிழகத்தின் கவலைகளை தீர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யும்படி, தமிழக அரசிடம் கூறி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekedatu #MinisterShivakumar
    பா.ஜ.க.வின் ‘ஆபரே‌ஷன் கமலா’ திட்டத்தை முறியடிக்க குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் இணைந்து பா.ஜ.க சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர்.
    பெங்களூரு:

    மதசார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான குமாரசாமி, காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மின்சார துறை மந்திரியுமான டி.கே.சிவகுமார் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து காங்கிரசுக்கு தாவிய ஜமீர் அகமத் ஆகிய 3 பேரும் முன்பு எலியும், பூனையும் போல் எதிரிகளாக இருந்தனர்.

    தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், இந்த மூவரும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, தங்களுக்குள் கூட்டணி அமைத்து உள்ளனர்.

    இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த பிடதி ஈகிள்டன் ரிசார்ட்டிலும், ஐதராபாத்துக்கு எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வதிலும் குமாரசாமி, சிவகுமார் மற்றும் ஜமீர் அகமத் ஆகியோர் பரஸ்பரம் சிரித்துக் கொண்டு, பம்பரமாக சுற்றி அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டதை கண்டு, சக எம்.எல்.ஏ.க்களே ஆச்சரியத்தில் மூழ்கினார்.

    மேலும், பா.ஜனதா கட்சியின் ‘‘ஆபரே‌ஷன் கமலா’’ திட்டத்தை முறியடிக்க இவர்கள் 3 பேரும் பாரதீய ஜனதாவை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கவும் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றனர். இந்த மூவர் கூட்டணி, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×