search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seat belt"

    • இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

    கடலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் பகுதிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போலீஸ்காரர்கள் ரவிச்சந்திரன், மணிகண்டன், பாலா ஆகியோர் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது விபத்துல்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய நபர்கள் சீட் பெல்ட் அணிந்து கொண்டும் செல்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இனிப்பு வழங்கி பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் சீட் பெல்ட் போடாத நபர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.

    • மும்பையில் கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்.
    • இந்த உத்தரவு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள பால்கரில் கடந்த மாதம் நடந்த சாலை விபத்தில் டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலியானார். விபத்தில் காரின் முன் சீட்டில் இருந்த 2 பேரும் உயிர் தப்பினர். ஆனால் பின் சீட்டில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால்தான் விபத்தின் போது காரின் முன்பகுதியில் மோதி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 சக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணியவேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்தன.

    இந்நிலையில், மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி, பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதுதொடர்பாக மும்பை போலீசார் பிறப்பித்துள்ள உத்தரவில், அனைத்து வாகனங்களிலும் பயணிகளுக்கும் சீட் பெல்ட் வசதியை ஏற்படுத்த அடுத்த மாதம் 1-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுகிறது. அதன்பிறகு மும்பையில் 4 சக்கர வாகனங்களில் டிரைவர் மட்டுமின்றி, பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் 194 (பி) (1) பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் சென்றால் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்தவில்லை என சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. #Helmet #Police

    சென்னை:

    இருசக்கர வாகனத்தில் சென்றால் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதிகளை அரசும், காவல்துறையும் முறையாக அமல்படுத்தவில்லை என சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

    மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு அமல்படுத்தவில்லை என்பதால், அதை முழுமையாக அமல்படுத்த கோரி சென்னை ஐகோட் கோட்டில் கே.கே.ராஜேந்திரன் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, 2015 ம்ஆண்டு கட்டாய ஹெல்மெட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் கடந்த 3 ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 5ந் தேதி உத்தரவிட்டனர்.


    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது தொடர்பாக நடத்தப்பட்டுவரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்தும், பல்வேறு விளம்பர யுக்திகள் குறித்தும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல 2015ல் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுக்கு பிறகு எத்தனை வழக்குகள் பதிவானது என்பது தொடர்பாக ஆண்டுவாரியான மற்றும் மாவட்டவாரியான அறிக்கையும் நீதிமன்றத்தின் பார்வைக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    அதனை படித்த நீதிபதிகள், பள்ளி கல்லூரிகளில் மட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதாது; ஹெல்மெட், சீட்பெல்ட் கட்டாயம் என்பது மோட்டார் வாகன விதிகளிலேயே உள்ள நிலையில் அதை அமல்படுத்துவதில்லை என குற்றம் சாட்டினர். காவல்துறையினர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியாமல் செல்லும் நிலையில், தேசியக் கொடியுடன் செல்லும் நீதிபதி வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் மதிப்பதில்லை; விதிகளை அமல்படுத்துங்கள் என்று சொன்னால் நீதிமன்றம் கட்டாயபடுத்துவதாக நீதிமன்றத்தின் மீதும், நீதிபதிகள் மீதும் திசை திருப்புகின்றனர் என அதிருப்தி தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர். #Helmet #Police

    ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #Helmet #Police
    சென்னை:

    தமிழகத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.

    போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தும், லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் போலீசார் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டி.ஜி.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. எனவே ஒழுங்கீனமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-


    தமிழக போலீசில் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் காலை 7 மணிக்கு ரோல்காலில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்துள்ளேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகன சாவியை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் ஹெல்மெட் வாங்கி வந்த பிறகே அவரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Helmet #Police
    ×