என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை முதல் போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை
Byமாலை மலர்30 July 2018 5:41 AM GMT (Updated: 30 July 2018 5:41 AM GMT)
ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #Helmet #Police
சென்னை:
தமிழகத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.
போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தும், லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் போலீசார் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டி.ஜி.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. எனவே ஒழுங்கீனமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழக போலீசில் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் காலை 7 மணிக்கு ரோல்காலில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்துள்ளேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகன சாவியை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் ஹெல்மெட் வாங்கி வந்த பிறகே அவரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Helmet #Police
தமிழகத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.
போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தும், லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் போலீசார் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டி.ஜி.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. எனவே ஒழுங்கீனமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகன சாவியை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் ஹெல்மெட் வாங்கி வந்த பிறகே அவரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Helmet #Police
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X