search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை முதல் போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை
    X

    நாளை முதல் போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை

    ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. #Helmet #Police
    சென்னை:

    தமிழகத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் 2015-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதும், கார் டிரைவர்கள் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டது.

    போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தும், லைசென்சை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் போலீசார் 75 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டி.ஜி.பி. மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. எனவே ஒழுங்கீனமான போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-


    தமிழக போலீசில் 1 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டும் போலீசார் மீது நாளை முதல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் காலை 7 மணிக்கு ரோல்காலில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வந்துள்ளேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும்.

    ஹெல்மெட் அணியாமல் பணிக்கு வரும் போலீசாரிடம் வாகன சாவியை வாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசார் ஹெல்மெட் வாங்கி வந்த பிறகே அவரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #Helmet #Police
    Next Story
    ×