search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road repair"

    • இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.
    • புதுவை அரசே மக்களைக் கொல்லும் மரண கால்வாயை உடனே சீராக்கு என வாசகங்கள் எழுதிய பேனரும் வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் கடைவீதி, வணிகர் வீதி சந்திப்பில் கழிவு நீர் கால்வாயின் மேல் இரும்பு கம்பியால் ஆன சிலாப் புதுவை அரசின் பொதுப் பணித்துறை சார்பில் போடப் பட்டுள்ளது.

    அந்த இரும்பு சிலாப்கள் பழுதடைந்து உள்வாங்கிய தால் அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த இரும்பு சிலாப்பை சரி செய்யாததால் கடைவீதியில் உள்ள மெகா பள்ளத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து விபத்து ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

    திருக்கனூரில் இருந்து மதகடிப்பட்டுக்கு செல்லக் கூடிய முக்கிய வழியாகவும் இந்த இடம் இருப்பதால் பஸ்கள், லாரிகளும் அடிக்கடி இந்த பள்ளத்தில் சிக்கி கொள்வதால் கடைவீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியா மல் இரு சக்கர வாகனங்க ளில் வருவோர் தவறி விழுந்தால் உயிர்பலி ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை சரி செய்யக்கோரி பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் பொதுப்பணி துறை சார்பில் இதுவரை நடவடிக்கை யும் எடுக்கப்ப டவில்லை.

    கடை வியாபா ரிகளும் இரும்பு சிலாப்பை சரி செய்து சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை யும் விடுத்தனர்.

    இந்நிலையில் கடைவீதி யில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினை சரி செய்ய வேண்டும் என்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் அபாய நிலையில் உள்ள பள்ளத்தில் கட்சி கொடி யினை நட்டு, புதுவை அரசே மக்களைக் கொல்லும் மரண கால்வாயை உடனே சீராக்கு என வாசகங்கள் எழுதிய பேனரும் வைத்துள்ளனர்.

    அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் பள்ளத்தில் கொடி நட்டு பேனர் வைத்துள்ளதை பார்த்து இனியாவது பொதுப்பணி த்துறை இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலை சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
    • சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54-வது வார்டு வீரபாண்டி பேருந்து நிலையத்திலிருந்து மீனம்பாறை வழியாக அவரப்பாளையம் செல்லும் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மேலும் அவரப்பாளையத்தில்எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளதால் இந்த சாலையை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலை சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • மார்ச் மாதம் 3-ந் தேதியன்று ஊரக உள்ளாட்சி துறையால் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சாலை ஒப்படைக்கப்பட்டது.
    • இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து காமராஜர் தினசரி சந்தை வழியாக சென்று தென்காசி-நெல்லை சாலையில் இணையும் ஊராட்சி ஒன்றிய சாலையானது அதிக மக்கள் போக்குவரத்து கொண்ட சாலையாகும்.

    இந்த சாலையை மாநிலநெடுஞ்சாலை துறைக்கு மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதியன்று ஊரக உள்ளாட்சி துறையால் அரசாணை எண் 20- மூலம் மாநில நெடுஞ்சாலை துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

    ஆனால் இதுசம்பந்தமாக நெடுஞ்சாலைத்துறை அரசாணை வெளியிடாததால் இந்த சாலை இப்போது ஊராட்சி ஒன்றிய சாலையாகவும் இல்லாமல், நெடுஞ்சாலைத்துறை சாலையாகவும் இல்லாமல் பணிசெய்யமுடியாமல் சாலை பராமரிப்பின்றி மேடு பள்ளங்களாக போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது.


    அரசு இந்த சாலை பணியை தொடங்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்ற நிலை உள்ளதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதாலும் இங்கு காணப்படும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரியாமல் வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது . மேலும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை தொடர்கிறது.

    எனவேஇது குறித்து ஆலோசித்த இந்த சாலையில் இயங்கிவரும் அரிசி ஆலை, செயற்கை மண் உற்பத்திசெய்யும் ஆலை ஆகியவற்றின் தொழில் அதிபர்கள் ஆர்.பி.ராஜன், ஜான், கே.பி.என்.ராஜ், தமிழ்பாண்டி, கே.பி.என்.அன்பு, ஏ.எஸ்.பி. பாஸ்கர், ஏ.கே. என்.ஜார்ஜ், ஏ.எஸ்.பி.சந்திரன் ஆகியோர் முடிவெடுத்து அரசு சாலை பணிதொடங்க தாமதம் ஆகும் என்பதால் மக்கள் நலன் கருதி தங்களது சொந்த செலவில் சாலையை சீரமைக்க முடிவெடுத்து ஒன்றிய குழு உறுப்பினர் ராம உதயசூரியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லப்பா ஆகியோர் மேற்பார்வையில் மேடு பள்ளங்களில் மண்ணை கொட்டி சாலையை திருத்தும் பணியினை மேற்கொண்டனர். இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலை பராமரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.
    • சாலையானது பெருமளவில் மோசமாக உள்ளதால் விவசாயிகள் இந்தச்சாலையின் வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து மருதடியூர் சாலையடியூர் வழியாக தற்போது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4 வழிச்சாலையை சென்றடையும் சாலையானது யூனியன் சாலையாக இருந்துவந்தது.

    தற்போது அந்த சாலையானது நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.இவை பராமரிக்கப்பட்டு 5ஆண்டுகளுக்கு மேல்ஆகிறது.

    இச்சாலைகள் அனைத்து பகுதிகளிலும் பெருமளவில் குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையானது பாவூர்சத்திரம் காய்கறிகள் மார்கெட்செல்லும் பிரதான சாலையாகும் இப்பகுதி பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயிகள் ஆவர்.

    இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விளை நிலங்களில் கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்ற பல்வேறு காய்கறிகள் பயிரிட்டு வருகிறார்கள். காலையில் எழுந்ததும் வயல்களில் சென்று காய்கறிகள் எடுத்துக் கொண்டு மாலையில் 4 மணிக்குள் மார்க்கெட் செல்ல வேண்டும்.

    சாலையானது பெருமளவில் மோசமாக உள்ளதால் விவசாயிகள் இந்தச்சாலையின் வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

    எனவே விவசாயிகள் நலன்கருதி இந்தச்சாலையை உடனடியாக பராமரித்து கொடுத்திட வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாகனேரியில் இருந்து துருவம்பட்டிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    கல்லல்:

    பாகனேரியில் இருந்து துருவம்பட்டிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது. பாகனேரி இருந்து துருவம்பட்டி வழியாக செல்லும் சாலையில் மூக்கான்பட்டி, ஆலவிழாம்பட்டி, சடையன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. பாகனேரி–துருவம்பட்டி செல்லும் 2 கிலோ மீட்டர் தூரமுடைய சாலை முற்றிலும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்து காணப்படுகிறது.

    இந்த சாலை வழியாக பள்ளி வாகனங்கள் உள்பட பல்வேறு வாகனங்களும், மாணவ–மாணவிகள் பள்ளி செல்ல சைக்கிளிலும், தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் பலதரப்பட்ட மக்களும் சென்று வருகின்றனர். மழை காலங்களில் சாலை தெரியாத அளவுக்கு பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி இருப்பதால், இந்த வழியாக செல்பவர்கள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

    முக்கியமான ஆன்மீக தலமான பட்டமங்கலத்தில் இருந்து கண்டுபட்டி, நாட்டரசன் கோட்டை செல்வதற்கு இந்த சாலை அதிக அளவில் பயன்படுகிறது. பாகனேரியில் இருந்து சொக்கநாதபுரத்திற்கு போக்குவரத்து தடைபடும் போதும், பாகனேரியில் இருந்து கல்லல் செல்வதற்கும் இந்த சாலை மிகவும் பயன்படுகிறது. மேலும் பணிகளுக்காகவும், பொருட்கள் வாங்கவும் பொதுமக்கள் பாகனேரி, மதகுபட்டிக்கு செல்ல இந்த சாலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

    இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவிற்கு சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுவதால், ஆட்டோ உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் இங்கு வருவதில்லை. இதனால் இந்த பகுதி மக்கள் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து வரவேண்டியுள்ளது. இதே நிலை கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைக்க, பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். #tamilnews
    ஆவடி அருகே சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நடத்திய சாலை மறியலையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    திருநின்றவூர்:

    ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் உள்ள குளக்கரை சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    தினமும் 10-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் இந்த பள்ளங்களில் கீழே விழந்து காயமடைந்து வருகின்றனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருமுல்லைவாயல் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியல் செய்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 6 மாதத்துக்கு முன்பு ஜல்லி கொட்டினர். ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். #tamilnews
    ×