search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Relief material"

    • தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.
    • 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், வழங்க ஏற்பாடு செய்து இருந்தார்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட கரும்பாலம் பகுதி அ.தி.மு.க வார்டு உறுப்பினர் நிரோஷா 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு காய்கறிகள், போர்வைகள் வழங்க ஏற்பாடு செய்து இருந்தார். நலத்திட்ட உதவிகளை கேத்தி பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி வழங்கினார்.

    மேலும் கரும்பாலம் பகுதியில் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் பல்வேறு தேவைகளை வார்டு உறுப்பினர் நிரோஷாவிடம் கூறினர்.

    அப்போது அவர்கள் மக்களுக்கு கழிப்பிடமோ குடிநீர், தெருவிளக்கு ஏதுவும் இல்லாமல் வாழ்க்கை நடத்தி வருவதாகவும், பலமுறை வீடு வசதி கேட்டு மனு வழங்கி இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.இது குறித்து வார்டு உறுப்பினர் நிரோஷா கூறும்போது, கரும்பால பகுதி மக்களின் அனைத்து அத்தியாவசிய அடிபடை தேவைகளும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று அனுப்பி வைத்தார். #ADMK #kadamburRaju
    மதுரை:

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களை உலுக்கி எடுத்த கஜா புயல் பாதிப்புக்கு புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    வீடு மற்றும் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பணியாற்றி வருகிறது.

    முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைக்காக உணவு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் செல்லூர்ராஜூ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை சேகரித்து 5 வாகனங்களில் இன்று தஞ்சை மற்றும் திருவாருர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், நிர்வாகிகள் சோலைராஜா, பரவை ராஜா, முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பிரிட்டோ, தமிழ்செல்வன், அரவிந்தன், ஜெயரீகன், கே.வி.கே. கண்ணன், பார்த்திபன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK #KadamburRaju
    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. #GajaCyclone
    சேலம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை, வாட்டர் பாட்டில், பால் பவுடர், கொசுவர்த்தி போன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்களை மாநில கொள்கை பரப்பு செயலாளர் உலகநம்பி தலைமையில் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அரிய லூரில் நடைபெறும் த.மா.கா 5-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு 5 தீபஜோதியுடன் நிர்வாகிகள் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் சின்னத்துரை, மகளிரணி மாநில பொது செயலாளர் சங்கீதா, மாநகர பொது செயலாளர் ஆட்டோ தயாளன், சக்தி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone
    ×