search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Congress Party"

    • மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ளார் சோனியா காந்தி
    • கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகளும் கட்சியின் பொது செயலாளருமான  பிரியங்கா காந்தியும் சென்னை வந்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து அமைக்கப்பட்டுள்ள கூட்டணியின் தமிழகத்தின் முக்கிய கட்சியான தி.மு.க.வின் சார்பில் அக்கட்சி எம்.பி. கனிமொழி முன்னிலையில் இன்று நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பிரியங்காவும், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். அங்கு சோனியா மற்றும் பிரியங்கா, தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியை அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும் இருவரும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடனும் கட்சி எம்.எல்.ஏ,க்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவருடனும் கட்சி நிலவரம், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலுக்கான வழிமுறைகள் மற்றும் தி.மு.க.வுடன் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    முன்னதாக கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுமாறு நிர்வாகிகளுக்கு சோனியா அறிவுரை வழங்கியதாக தெரிகிறது.

    சுமார் 5 வருடங்கள் கழித்து சோனியா, தமிழகம் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்கள் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. #GajaCyclone
    சேலம்:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை, வாட்டர் பாட்டில், பால் பவுடர், கொசுவர்த்தி போன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய நிவாரண பொருட்களை மாநில கொள்கை பரப்பு செயலாளர் உலகநம்பி தலைமையில் டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அரிய லூரில் நடைபெறும் த.மா.கா 5-ம் ஆண்டு தொடக்க விழாவிற்கு 5 தீபஜோதியுடன் நிர்வாகிகள் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில இணைச்செயலாளர் சின்னத்துரை, மகளிரணி மாநில பொது செயலாளர் சங்கீதா, மாநகர பொது செயலாளர் ஆட்டோ தயாளன், சக்தி மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். #GajaCyclone
    ×